world

img

2021ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு 329 பேர் பரிந்துரை

2021ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 329 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 234 தனிநபர்களும், 95 அமைப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
இதில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க், ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.

;