world

img

அமெரிக்கா வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு - 10 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள பவுல்டர் பகுதியில் வணிகவளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட தொடங்கியுள்ளார். இதை கண்ட பொது மக்கள் அலறியடித்து ஓடினர். 
தகவலறிந்து வந்த காவல்துறையினர் , வணிக வளாகத்தில் புகுந்தனர். இந்நிலையில் வணிக வளாகத்தினுள் பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் இருந்ததால், காவல் துறையினர் அந்த நபரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொது திடீரென அந்த நபர் துப்பாக்கியால்  சுட ஆரம்பித்துள்ளார். இதில் காவல்துறை அதிகாரி உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து பவுல்டர் காவல்துறை அட்டார்னி மைக்கேல் டஹர்டி கூறுகையில் , இது மிகவும் வேதனை மிகுந்தநாள். வழக்கம்போல் பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உயிரிழப்புக்கு நிச்சயம் நீதி கிடைக்க வழி செய்வோம் என்று தெரிவித்தார்.

;