world

img

தீக்கதிர் உலக செய்திகள்

இஸ்ரேலில் காட்டுத் தீ  அவசர நிலை அறிவிப்பு 

இஸ்ரேலில் பல்வேறு நகரங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவும் தீ ஜெருசலேம் நகருக்கும் பரவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகளின் உதவியை கேட்டுள்ளது இஸ்ரேல். ஹெலிகாப்டர், விமானங்களின் உதவியுடன் 120 தீயணைப்புக் குழுக்கள் தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றன. தீயில் படுகாயமடைந்த மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

எவரெஸ்டில் ஏறுவதற்கு   புதிய கட்டுப்பாடு 

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. சிகரத்தில் ஏற முயற்சிப்பவர்கள் 7000 மீட்டர் உயர சிகரத்தில் ஏற்கெனவே ஏறிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே எவரெஸ்டிற்கு அனுமதி கொடுக்க முடியும் என நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளது. பாதுகாப்பை மேம்படுத்தவும், கூட்ட நெரிசலைக் குறைக்கவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 1953 முதல் எவரெஸ்ட்டில் இதுவரை 9000 பேர் ஏறியுள்ளனர். 300 பேர் பலியாகி உள்ளனர்.

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு  ஆலோசகர் நியமனம்

பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக லெப்டினட் ஜெனரல் முக மது அசிம் மாலிக்கை அந்நாட்டு அரசு நிய மித்துள்ளது. இவர் இன்டர் சர்வீஸ் இன்டலிஜன்ஸ் (ஐஎஸ்ஐ) என்ற அமைப்பின் தலைவராக இருக் கிறார். அப்பதவியிலும் அவர் தொடர்வார் என தெரி விக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு இந்தியா எப் போது வேண்டுமானாலும் தங்கள் மீது தாக்குதல் நடத்தும் என அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச் சர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான்  புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிகாரிகள்  குழந்தைகளை கடத்துகின்றனர் 

அமெரிக்காவில் குடியேறியுள்ள வெனிசுலா மக்களின் குழந்தைகளை அந்நாட்டு அதிகாரிகள் கடத்துவதாக வெனிசுலா உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ குற்றம் சாட்டியுள்ளார். புலம்பெயர்ந்த மக்களின் குழந்தைகளைத் கடத்துவதன்  மூலம் குடும்பங்களைப் பிரிக்க முயற்சிக்கிறது ஏகாதிபத்திய அரசு. இது போன்ற மோசமான நடவடிக்கைகளை செய்வதை தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

சூடான் உள்நாட்டுப் போரை உடனே நிறுத்துக: ஐ.நா.

சூடானில் உள்நாட்டு போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐநா பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும் அந்த நாட்டில் இடைவிடாமல் நீடித்துள்ள துன்பம் மற்றும் அழிவை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச சமூகம் மிக வேகமாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மோசமான தாக்குதலால் இந்த மாத துவக்கத்தில் மட்டும் 4,00,000 க்கும் அதிகமான மக்கள் முகாமில் இருந்து கட்டாயமான முறையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.