லண்டன், ஜூலை 9- இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் புலம்பெயர்ந்து வரும் மக்களை ருவாண்டாவிற்கு கடத்தும் வகையில் கொண்டு வந்த திட்டத்தை புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நீக்கியுள்ளார். இதனை மக்கள் மற்றும் முற்போக்கு சக்திகள் வரவேற்றுள்ள னர். எனினும் நாட்டின் எல்லையை மேலும் ராணுவ மயமாக்கும் திட்டங்களை கைவிடுமாறும் வலி யுறுத்தி வருகின்றனர்.
இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற தேர்த லில் அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட் டிவ் ( பழமைவாத ) கட்சியை வீழ்த்தி கெய்ர் ஸ்டார்ம ரின் லேபர் கட்சி வெற்றி பெற்றது. லேபர் கட்சியின் ஸ்டார்மர் இஸ்ரேல் ஆதரவு, போர் ஆதரவு மற்றும் புலம்பெயர் தொழிலாளர்க ளுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்.
மேலும் லேபர் கட்சியில் அவர் தலைமை பொறுப்பி ற்கு வந்த பிறகு பாலஸ்தீன ஆதரவு போர் எதிர்ப்பு கொள்கை பேசிய அனைவரையும் செயல்பட விடாமல் செய்ததுடன் இந்த கொள்கைகளை கடைப்பிடித்து வந்த முன்னாள் தலைவர் ஜெர்மி கோர்பினை கட்சியை விட்டே நீக்கினார். இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர் களுக்கு ஆதரவாக அவர் எடுத்துள்ள முடிவு ஆச்ச ரியத்தை கொடுத்துள்ளது. தேர்தல் வெற்றிக்கு பிறகு நடைபெற்ற முதல் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் ‘அந்த முடிவு இறந்து விட்டது,
அது புதைக்கப்பட்டது’ என கூறியுள்ளார். இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் ஏகாதிபத்திய சுரண்டலால் வறுமையில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்து செல் கின்றனர்.
அதில் இங்கிலாந்து வரும் மக்களை ருவாண்டா விற்கு கடத்தும் திட்டத்தை சுனக் மக்கள் எதிர்ப்பை யும் மீறி கொண்டு வந்தார். இந்த திட்டத்திற்கு 3,104 கோடிகள் வரை செலவாகும் என்பதால் ஏற்க னவே அதிக வரிகளை எதிர்கொண்டு வரும் மக்களை மேலும் பாதிக்கும். அது அரசுக்கு எதிரான கோப மாக மாறிவிடும் என்ற அச்ச உணர்வில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தை நீக்கிய அறிவிப்புக்கு பின் நாடு கடத்த அடைத்து வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட புலம்பெயர் அகதிகள் விடு விக்கப்பட்டுள்ளனர்.