world

img

நேபாளத்தில் நிலச்சரிவு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4  பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் கடந்த திங்கட்கிழமை பருவமழை தொடங்கி, பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக, கிழக்கு நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, தப்லேஜங் மாவட்டம் பத்தாங்லுங் பகுதியில் நேற்று இடைவிடாமல் மழை பெய்ததன் காரணமாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலச்சரிவில் 2 வீடுகள் புதைந்தன. அதில், ஒரே வீட்டில் இருந்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு மகள்களும், அவர்கள் வளர்த்து வந்த கோழி, மாடுகள் ஆகிவையும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தன. மற்றொரு வீட்டில் இருந்தவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேபாளத்தில் ஒவ்வெரு ஆண்டும் பருவமழை காலத்தில் மழையால் பேரழிவுகள் ஏற்படுகின்றன.