டெல்அவிவ், ஜூன் 18- இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ஐ.நா நிவாரண உதவிப் பொருட்களை அனுமதிக்கும் வகையில் சில முக்கிய சாலைகளில் தினமும் சிறிது நேரம் தங்கள் தாக்குதலை இடைநிறுத்த திட்ட மிட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்தி ருந்தது.இதனை தொடர்ந்து அந்நாட்டு ராணுவ தலைமையை இஸ்ரேல் பிரதமர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதனால் பல்வேறு நாடுகளும் சர்வ தேச அமைப்புகளும் ஐ.நா வாகனங் களை தடுக்கக் கூடாது. தொடர்ந்து உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மேலும் ஐ.நா பாதுகாப்பு அவையில் போர் நிறுத்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்ட பிறகு எந்த காட்டுப்பாடுகளும் இன்றி இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்து வது கடுமையான விளைவுகளை உரு வாக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில் காசாவின் வடக்குப் பகுதி நோக்கிச் செல்லும் கெரெம் ஷாலோம் கிராசிங்கில் இருந்து சலா அல்-தின் சாலையில் காசா நேரப்படி காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை தினமும் தாக்குதலை இடை நிறுத்தும் திட்டம் உள்ளதாக இஸ்ரேல் ராணுவத்தரப்பில் கூறப்பட்டது.
இந்த 11 மணிநேர மனிதாபிமான இடைநிறுத்தத்தை ராணுவம் அறி வித்த உடனேயே இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அந்நாட்டு ராணுவச் செய லாளரை அழைத்து “தாக்குதல்களை இடைநிறுத்த முடியாது” “இடை நிறுத்தக் கூறுவதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
போர்க்கால அமைச்சரவை கலைப்பு
மேலும் ஞாயிற்றுக்கிழமையன்று மாலை நடந்த பாதுகாப்பு அமைச்சர வை கூட்டத்தில் போர்க்கால அமைச்சரவை யை கலைப்பதாகவும் அறிவித்துள்ளார்.
நேதன்யாகுவின் தீவிர வலதுசாரிக் கூட்டணியில் உள்ள, மத்திய வலது அர சியல் கொள்கை கொண்ட பென்னி காண்ட்ஸ் போர்க்கால அமைச்சரவை யில் இருந்து கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.ஹமாஸ் உடனான போரில் உண்மையான வெற்றியை அடைவதில் இருந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தடுப்பதாக அதற்கு காரணம் கூறி இருந்தார். மேலும் அப்போதே அந்நாட்டு அமைச்சரவையை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார்.
அவர் ராஜினாமா செய்த தினத்தில் இருந்தே போர்க்கால அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தீவிர வலதுசாரிகளான இஸ்ரேல் நிதியமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச், பாதுகாப்புத் துறை அமைச் சர் பென்-க்விர் ஆகியோர் ஒரு புதிய போர் அமைச்சரவையை நிறுவுவதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அமெரிக்கா உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகளின் சில உடன்பாடுகளுக்கு அழைப்பு விடுத்த போது கூட, இஸ்ரேல் காசா மீது குண்டுவீச்சைத் தொடர வேண்டும் என்று இவ்விருவரும் அமைச் சரவையில் வாதாடியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போர் நடவடிக்கை களை ஆதரிக்கின்ற ஒருவரை இவ்வமைச் சரவையில் இணைக்க இவர்கள் முயற்சிக் கின்றனர். இருப்பினும் அவர்களின் கோரிக்கையை நேதன்யாகு நிராகரித்த தாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் காண்ட்ஸுடனான கூட்டணி ஒப்பந்த அடிப்படையில் அமைச்சரவை உருவாக்கப்பட்டது. தற்போது அவர் வெளியேறிவிட்டார் இனி புதிய அமைச்சரவை தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் டெர்மர்,காடி ஐசன்கோட், ஆர்யே டெரி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கொண்ட சிறிய குழுவுடன் போர் குறித்த ஆலோசனைகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மோட்ரிச், பென்-க்விர் ஆகிய இருவரும் போர் குறித்த முக்கிய முடிவுகளில் ஈடுபடும் வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது