world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையும்  நிவாரண உதவிகள் 

பாப்புவா நியூ கினியா நிலச்சரிவில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு தற்போது சிறிது சிறிதாக உத விப்பொருட்கள் கிடைக்க ஆரம்பித்துள்ள தாக கூறப்பட்டுள்ளது. எனினும் உயிர் பிழைத் துள்ள மக்கள் மனதளவில் மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் 40 சதவீதம் பேர் 16 வயதுக்கு குறைவான வர்கள் எனவும் இந்த பேரழிவில் அதிகம் பாதிக்கப்பட்டது குழந்தைகள் தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லாவோஸ்-வியட்நாம்  ஒத்துழைப்பு உடன்படிக்கை 

லாவோஸ் - வியட்நாம் ஆகிய நாடுகள் தொழில் நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஒப்புக்கொண்டுள்ளன. இருநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்ற ஒத்து ழைப்பு கூட்டத்தில் உயர் தொழில்நுட்ப பரிமாற்றம் செய்தல், உயர் தொழில்நுட்ப மண்டலங்கள், தொழில்நுட்ப சேவைகள், மாநில மேலாண்மை மற்றும் கொள்கைத் திட்டமிடலில் அனுபவத்தைப் பகிர்ந்து கொள் வது என உடன்படிக்கை ஏற்படுத்தப் பட்டுள்ளது.  

பிரிக்ஸில் இணைய  தாய்லாந்து அமைச்சரவை ஒப்புதல் 

பிரிக்ஸ் கூட்டமைப்பில் தாய்லாந்தை உறுப்பினராக இணைக்க வெளியுறவுத் துறை  அமைச்சகம் தாக் கல் செய்துள்ள வரைவுக்கு அந்நாட்டு அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடாக இருப்பது, தாய் லாந்திற்கு நன்மை அளிப்பதுடன் சர்வதேச அரங்கில் நிலையை உயர்த்தவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புக ளை ஏற்படுத்தவும் உதவும் என்று பிரதமர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சாய் வசாரன்கே  தெரிவித்தார்.