what-they-told

img

குறைந்த செலவில் ஹைட்ரோபோனிக்ஸ் தீவனம்

கோவை வேளாண் பல்கலை மாணவர்கள் விளக்கம்

திருப்பூர், நவ. 6- திருப்பூர் மாவட்டம் பொங்க லூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கோவை வேளாண் பல்கலைக்கழக இறுதியாண்டு இளங்கலை வேளாண்மை பயிலும் மாணவர் கள், கிராமப்புறத் திட்டத்தின் கீழ் களப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக ஞாயிறன்று  அலகுமலை கிராமத்தின் அருகே  உள்ள ராமம்பாளையம் கிராமத்தில் கோவை வேளாண் கல்லூரி மாண வர்கள் ஹைட்ரோபோனிக்ஸ் தீவ னத்தை பற்றிய செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் மாணவர்கள் கூறுகை யில், தீவனப் பற்றாக்குறை மற்றும் வறட்சி மிகுந்த பகுதிகளில் கால் நடை வளர்ப்பினை எளிமையாக் கும் ஒரு புதிய தொழில்நுட்பமாக  நீரி யல் தீவன வளர்ப்பு முறை அமைகி றது. இதன் மூலம் தீவன உற்பத்தி செலவைக் குறைப்பது மட்டுமல்லா மல், பால் உற்பத்தி மற்றும் அதன் தரத்தை அதிகரிக்கிறது. செலவு மற்றும் வறட்சி காரணமாக கால் நடை வளர்ப்பினை கைவிடும் விவசாயிகளுக்கு நல்ல மாற்று தீர்வாக இது அமைகிறது. குறைந்த நீர் மற்றும் நில வளத்தை பயன்ப டுத்தி ஊட்டச்சத்து மிக்க தீவன உற்பத்தி சாத்தியமாகும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிய வகையில் கிடைக்கும் தானிய வகைகளான சோளம், மக்காச்சோ ளம், ராகி, கம்பு மற்றும் பருப்பு வகை களான தட்டைப்பயறு, கொள்ளு ஆகியவற்றை உற்பத்தி செய்ய லாம் என்றனர். இத்துடன், விதைகளை தேவை யற்ற குப்பை கூழங்களிலிருந்து பிரித்து எடுத்து கழுவி 24 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின்பு நீரினை வடித்து ஈரக் கோணிப்பையில் 24 மணி நேரம்  கட்டி வைப்பதன் மூலம் முளைப்பை  தூண்டலாம். பிறகு செவ்வக வடிவி லான பிளாஸ்டிக் தொட்டியில் பரப்பி 5 நாட்கள் வளரும் வரை நாளுக்கு இருமுறை தண்ணீர் தெளிக்கவும்.ஏழு முதல் எட்டு நாட்கள் நிழலில் வளர்த்து கால் நடைகளுக்கு தீவனமாக அளிக்க லாம். இதன் பயனானது இந்த  தீவனத்தை தொடர்ந்து அளிப்பதன் மூலம் பாலில் உள்ள கொழுப்பு சத்து மற்றும் எஸ்என்எப் அதிகரிக் கிறது. மேலும் கால்நடை சினை பிடிக்கும் தன்மை அதிகரிக்கும். ஆடுகளுக்கு இதனை அளிப்பதன் மூலம் குறைந்த நாளில் மிகுந்த எடையை எட்டும். இதனை கால் நடை விவசாயிகளுக்கு விளக்கிய பின்னர் வேளாண் பல்கலை கழக மாணவர்கள் அப்பகுதியின் முன் னோடி விவசாயி மயில்சாமியின் கால்நடைகளுக்கு நேரடியாக தீவ னங்களை அளித்து விளக்கம் கொடுத்தனர்.