what-they-told

img

“குப்பை கொட்ட நீயும் வரக்கூடாது; நானும் வரமாட்டேன்”

கோவை, ஆக.11- “குப்பை கொட்ட நீயும் வரக் கூடாது; நானும் வரமாட்டேன்” என வடி வேலு பாணியில் கணியூர் ஊராட்சி நிர்வாகம் நூதன முறையில் அறிவிப்பு  பலகை வைத்துள்ளது. கோவை மாவட்டம், கருமத்தம் பட்டியை அடுத்த கணியூர் ஊராட்சிக்கு  உட்பட்டது இந்திரா நகர். கடந்த சில  மாதங்களாகவே இப்பகுதி சாலை யோரங்களில் பொதுமக்கள் குப்பை களை கொட்டி வந்தனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. மேலும், கொட்டும் குப்பைகளில், கோழிக்கழிவுகள், உணவு பொருட்கள் கிடப்பதால் அதனை உண்பதற்காக நாய்கள் தொல்லையும் அதிகரித்து காணப்பட்டது. சாலையில் செல் வோர் மீது குப்பையில் உள்ள பிளாஸ் டிக் பேப்பர் பறந்து விழுந்து சிறு, சிறு  விபத்துகளும் ஏற்பட்டு வந்தது.  இந்நிலையில், மக்கள் சாலையோ ரங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்க முடிவு செய்த கணியூர் ஊராட்சி நிர்வாகம், அந்த பகுதியில் குப்பை கொட்டாதீர் என அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துள்ளனர். இந்த அறிவிப்பு பலகையானது நகைச்சுவை கலைஞர் வடிவேலு பேசிய ஒரு பிரபலமான வசனத்தை போன்று உள்ளது. அந்த அறிவிப்பு பலகையில், “இந்த இடத்துக்கு குப்பை கொட்ட நீயும் வரக்கூடாது; நானும் வரமாட்டேன்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இது அப்பகுதி பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் குப்பை கொட்டுவதை தவிர்க்கின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் வீடு, வீடாக  சென்று சுகாதாரப் பணியாளர்கள் குப்பையை சேகரித்து வருகின்றனர்.

;