தென்காசி,அக்.20- இளம் ஊராட்சி மன்றத் தலைவிகளாக இரு பெண்கள் பதவியேற்றுள்ளனர். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில்,தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவியாக சாருகலா (22) என்பவர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அனு (21) என்பவர் தெற்குமேடு ஊராட்சி மன்றத் தலைவியாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில் புதன்கிழமையன்று இவர்கள் இருவரும் அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.