what-they-told

img

வங்கிக்குள் புகுந்த கண்டெய்னர் லாரி

செங்கல்பட்டு, ஏப். 17- செங்கல்பட்டு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, வங்கிக்குள் நுழைந்து விபத்துக்குள் ளானது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சா லையில் செங்கல்பட்டுநோக்கி ஞாயி ணற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கம் அருகே, திடீரென ஒரு வாகனம் சாலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வாகனத்தின் மீது மோது வதை தவிர்க்க ஓட்டுநர் லாரியை திருப்பிய போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிரே இருந்த வங்கியின் கதவை உடை த்துக் கொண்டு உள்ளே புகுந்து விபத்துக் குள்ளானது. இந்த சம்பவத்தின் போது வங்கியின் வாசலில் பணியிலிருந்த காவ லாளி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விபத்தில் சிக்கிய  லாரியின் ஓட்டுனர், உதவியாளர்களை மீட்டு அருகில் இருந்த செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக் குள்ளான கண்டெய்னர் லாரியை இரண்டு கிரேன் மற்றும் ஒரு தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.