இயற்கையை அதன் தன்மை மாறாமல் பாதுகாப்பதில் படாம்பூச்சிகளின் பங்கு இன்றியமையாதது. மலைக்காடுக ளிலும் அடர்ந்த வனங்களிலும் மட்டு மின்றி பிற பகுதிகளிலும் அரியவகை தாவரங்கள் மற்றும் மலர்களின் பர வலுக்கு இந்த பட்டாம் பூச்சியின் மக ரந்த சேர்க்கையே முக்கிய காரணம். இந்த சின்னஞ்சிறிய பட்டாம் பூச்சிகள் நிலத்தில் வாழும் மிகப்பெரும் உயிரின மான காட்டு யானை கூட்டங்களைப் போல ஆண்டுக்கு இருமுறை பருவ சூழ லுக்கு ஏற்றார்போல் இடப்பெயர்ச்சி செய்யும் இயல்புடையது.
தென்மேற்கு பருவமழையின் துவக்க காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் இருந்து லட்சக்கணக்கில் பறக்க துவங்கும் இவை, கிழக்கு தொடர்ச்சி மலைக்காடுகளை சென்றடையும். இதேபோல், இனவிருத்திக்கு பின் னர் அங்கிருந்து வடகிழக்கு பருவ மழையின் இறுதி காலத்தில் மீண்டும் புதிய பூச்சிகளின் கூட்டமாக கிழக்கு தொடர்ச்சி மலைக்காட்டில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளை வந்தடையும். இந்த இடப்பெயர்ச்சி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தவறாமல் தொடரும் ஒரு இயற்கை சார்ந்த நிகழ்வு. இதன்படி தற்போது வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறைந்து வருவதையும், பருவமழை ஓயப்போவதையும் சுட்டிக்காட்டும் வகையில் கிழக்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக பட்டாம்பூச்சிகள் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளை நோக்கி வர துவங்கியுள்ளன.
தமிழகத்தில் நூறு முதல் முந்நூறு கிலோமீட்டர் தொலைவு வரை வலசை செல்லும் இந்த சின்னஞ்சிறு வண் ணத்துப் பூச்சிகளுக்கு நீண்ட தூரம் பறந்து செல்ல சில கனிம சத்துக்கள் அவசியம் தேவை. இக்கனிம சத்துக் கள் ஆறுகள், ஓடைக்கரைகளில் சேக ரமாகும் தாது மணல் வெளிகளிலும் காட்டு யானைகளின் சானத்திலும் கிடைக்கும் என்பதால் இவற்றை விரும்பி உண்ணும். இவையனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலையடி வாரத்தில் உள்ள கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள கல் லார் பகுதியில் கிடைக்கும் என்பதால் எண்ணற்ற பல்வகை பட்டாம்பூச்சிகள் வந்தபடி உள்ளன. இதில் அண்மையில் தமிழ்நாட்டின் அரசு சின்னங்களில் ஒன்றாக அறி விக்கப்பட்ட தமிழ்மறவன் பட்டாம் பூச்சி உள்ளிட்ட ஏராளமான அரிய வகை பட்டாம்பூச்சிகள் காணக் கிடைப்பதாக கூறும் பட்டாம்பூச்சி ஆர்வலர்கள், இவற்றை ஆய்வு செய்து ஆவணப்படுத்த துறைசார்ந்த வல்லு னர்கள் “பட்டர்பிளை ஹாட் ஸ்பாட்” என்றழைக்கப்படும் கல்லார் பகுதிக்கு வர வேண்டும் என கோரிக்கை விடுக் கின்றனர்.