weather

img

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு....

சென்னை:
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன் றும், நாளையும் நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக் கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியதேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங் களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

10-ந் தேதி நீலகிரி, கோவை மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. பவானி, வாலாஜாவில் தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

;