weather

img

தமிழகத்தில் 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு...

சென்னை:
கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பு வருமாறு:-

தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண் டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும்.மேலும், ஜூலை 27 முதல் 30ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.தென்மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

;