weather

img

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பெரம்பலூர், அரியலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகை மாவட்டங்களில் கனமழைக்கு  வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வெப்பச் சலனம் காரணமாகப் பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்குள் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

;