technology

img

19 செயற்கைக்கோள்களுடன்  இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.சி - 51 ராக்கெட்...

ஸ்ரீஹரிகோட்டா:
பி.எஸ்.எல்.வி-சி-51 ராக்கெட் மூலம் 19 செயற்கைக்கோள்கள் ஞாயிறன்று விண்ணில் செலுத்தப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த அமசோனியா-1 செயற்கைக்கோளுடன் இந்தியாவை சேர்ந்த இன்ஸ்பேஸ் நிறுவனத்தின் யூனிட்டிசாட் 3 செயற்கைகோள்கள், ஒரு சதீஸ்தவான் சாட், நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் 14 செயற்கைக்கோள்கள் உட்பட 19 செயற்கைகோள்களும்  அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்களும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தால் (இஸ்ரோ) செலுத்தப்படுகின்றன.ஆந்திர மாநிலம்  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஞாயிறன்று காலை 10.24 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. காடுகள் அழிப்பை கண்காணிப்பதற்கும் பிரேசில் நாட்டின் விவசாயத்தை பகுப்பாய்வு செய்ய உதவும் அமசோனியா-1 செயற்கைக்கோள் பூமியில் இருந்து 637 கிலோமீட்டர் தூரத்தில் அதன் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இதன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள்.  பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் 78-வது ராக்கெட் ஆகும்.  பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் இந்த ஆண்டின் முதல் திட்டமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

;