technology

img

GSLV-F14 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, INSAT-3DS செயற்கைக்கோளுடன் GSLV-F14 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 
வானிலை மாற்றத்தைத் துல்லியமாக ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளானது புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 
INSAT-3DS எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-ஆவது ஏவுதளத்திலிருந்து GSLV-F14 ஏவுகணை மூலம் இந்த செயற்கைக்கோள் மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான 27.30 மணி நேர கவுன்ட்-டவுன் நேற்று (பிப்ரவரி.16) மதியம் 2.05 மணிக்குத் தொடங்கியது.
INSAT-3DS செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதை அடுத்து,விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் வாழ்த்துகளை தெரிவித்தார்.
INSAT-3DS-இன் பயன்கள்: 
இந்திய வானிலை ஆய்வு மையத்துக்குச் சொந்தமான இந்த செயற்கைக்கோள் 2,275 கிலோ எடை கொண்டது. இதில் உள்ள 6 சேனல் இமேஜர் உள்ளிட்ட 25 விதமான ஆய்வு கருவிகள், பூமியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாகக் கண்காணித்து, வானிலை தகவல்களைத் துல்லியமாக வழங்கும். இந்த செயற்கைக்கோள் மூலம் புயல் எப்போது கரையைக் கடக்கும் என்பதை 2 நாட்களுக்sகு முன்பே கண்டறிய முடியும்.
அதேபோல புயல் கரையைக் கடக்கும் இடத்தை சுமார் 20 கிலோ மீட்டர் துல்லியத்தில் கண்டறிய முடியும். மேலும், பேரிடர் காலங்களில் காற்றில் ஏற்படும் மாற்றங்கள், புயலின் மாற்றங்களைத் துல்லியமாக அறிய முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
 

;