செங்கல்பட்டு,டிச.1- கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி சாந்தா. இவர்கள் இருவரும் செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் பகுதியில் வசிக்கும் மகளின் வீட்டுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வந்துள்ளனர். பின்னர், சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதி யில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ப தற்காக, கல்பாக்கத்தில் இருந்து கார் மூலம் சென்றுள்ளனர். கல்பாக்கம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் கண்ணன் காரை இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, கார் சிறுதாவூர் அடுத்த கருங்குழிப்பள்ளம் அருகே சென்றுகொண்டிருந்த போது, எதிர்திசையில் பாண்டிச்சேரி நோக்கி வந்த மற்றொரு கார், கட்டுப்பாட்டை இழந்து, இவர்கள் வந்த கார் மீது மோதியது. இதில், சாந்தா மற்றும் காரின் ஓட்டுநர் பலத்தகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்த னர். பின்னர் காயமடைந்த ராஜசேகரை மீட்டு கேளம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.