tamilnadu

img

விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

வேலூர், ஆக.10- விஐடியும் - ராபர்ட் பாஷ் நிறுனவமும் இணைந்து தானியங்கி வாகனங்கள் குறித்த ஆராய்ச்சி செய்வதற்கான பணிகள்  மேற்கொள்ள உள்ளது. இதற்கான புரிந் துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆளில்லா  வாகனம் வடிவமைப்பு, வாகனங்களின் புதிய தொழில்நுட்ப வடிவமைப்பு சம்மந்த மாக பல்வேறு வகையான ஆராய்ச்சி பணி கள் விஐடியில் மேற்கொள்ளப்படும். மாண வர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தானியங்கி வண்டிகள் குறித்த ஆராய்ச்சி மட்டுமல்லாது சுகாதார பராமரிப்பு கண்டறி யும் முறை மற்றும் கூட்டு ஆராய்ச்சி நடவ டிக்கைகளை வலுப்படுத்தப்படும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி வேந்தர் டாக்டர். கோ.விசுவநாதன், ராபர்ட் பாஷ் நிறுவன மூத்த துணைத்தலைவர்  ஆர்.கே. செனாய் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். உடன் விஐடி துணைத்தலைவர் டாக்டர்.சேகர் விசுவநாதன், துணை வேந்தர் டாக்டர். ஆனந்த், ஆ.சாமுவேல், பதிவாளர் டாக்டர்.  கே.சத்தியநாராயணன், , மனித வள மேம்பாடு  துறை தலைவர் ஸ்ரீராம் மற்றும் வி ஐடி பேரா சிரியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.