tamilnadu

img

ஜன.8 வேலை நிறுத்தம்: எல்.ஐ.சி முகவர்கள் பங்கேற்பு

சென்னை, டிச.17-  பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும் அனைத்து தொழிற்  சங்கங்கள் பங்கேற்கும் நாடு தழுவிய பொது வேலை  நிறுத்தத்தில் எல்.ஐ.சி முகவர்களும் பங்கேற்பது என முடிவு செய்துள்ளனர். எல்.ஐ.சி முகவர்கள் (லிகாய்) சங்கத்தின் மாநி லக்குழு கூட்டம் சென்னை சிந்தாதரிப்பேட்டையில்  உள்ள மின் ஊழியர் அரங்கத்தில் ஞாயிறன்று  (டிச.15) நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாநில  செயல் தலைவர் ஏ.பூவலிங்கம் தலைமை தாங்கி னார். இதில் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ. கலாம், பொருளாளர் கே.தாமோதிரன் உட்பட பலர்  கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிஐடியு  மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன்  சிறப்புரை யாற்றினார். முகவர்களுக்கு,  முகவராக நீடிக்கும் வரை குழு  காப்பீடு, மருத்துவக் காப்பீடு வழங்க  வேண்டும், கேரள அரசு வழக்கும் சமூக பாது காப்புத் திட்டத்தை போன்று தமிழக அரசும்  எல்.ஐ.சி முகவர்களை உள்ளடக்கிய சமூக பாது காப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,  எல்ஐசி பாலிசிகள் மீதான ஜிஎஸ்டி-யை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.