tamilnadu

img

பட்டாசு ஆலையில் தீ விபத்து - ஒருவர் பலி

ராணிப்பேட்டை அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே ஜம்புகுலத்தில் பட்டாசு கிடங்கில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்தான் . மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  


;