tamilnadu

மூடிக்கிடக்கும் நியாயவிலைக் கடைகள்: பொதுமக்கள் அவதி

வேலூர், ஜூன் 20- வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சின்னவரிகம் தொடக்க வேளாண்மை கூட்டு றவு வங்கி உள்ளது. இந்த கூட்டுறவு வங்கி யின் கீழ் சின்னவரிகம், மிட்டாளம், பெரிய வரிகம், துத்திப்பட்டு ஆகிய 4 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் சின்னவரிகம், மேகனாம்பல்லி, ரகுநாதபுரம், சின்னவரிகம் காலனி, சென்னப்ப நகர், மிட்டாளம், கீழ்  மிட்டாளம் காலனி, புதுமனை, வன்னியநாத புரம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிரா மங்கள் உள்ளன. இந்த 4 ஊராட்சிகளில் 5 நியாயவிலைக் கடைகள், ஒரு பகுதிநேர நியாய விலைக் கடை, ஒரு மகளிர் கூட்டுறவு நியாயவிலை பகுதிநேர கடை உள்ளன. இதில், சின்ன வரிகம், பெரியவரிகம், மிட்டாளம், பைரப்பள்ளி, துத்திப்பட்டு ஆகிய இடங்க ளில் முழு நேர நியாயவிலைக் கடை களும், பந்தேரப்பள்ளியில் பகுதி நேர நியாயவிலைக் கடையும், கன்றாம்பள்ளியில் மகளிர் கூட்டுறவு நியாயவிலை பகுதி நேர கடையும் உள்ளன. இதில் சின்னவரிகம் நியாயவிலைக் கடை யில் 700 குடும்ப அட்டைதாரர்களும், பைரப்பள்ளியில் 575, மிட்டாளத்தில் 350, பந்தேரப்பள்ளி பகுதி நேர நியாயவிலைக் கடையில் 250, பெரியவரிகத்தில் 550, துத்திப்பட்டில் 1,800, கன்றாம்பல்லி மகளிர் கூட்டுறவு நியாயவிலை பகுதிநேரக் கடையில் 350 குடும்ப அட்டைதாரர்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. 7 நியாயவிலைக் கடைகளுக்கு 3 விற்பனையாளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் கூடுதல் பொறுப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். பெரும்பாலும் நியாய விலைக் கடைகள் மூடியே இருப்பதாக பொது மக்கள் கூறுகின்றனர். போதிய விற்பனை யாளர்கள் இல்லாததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கன்றாம்பல்லியில் உள்ள மகளிர் கூட்டுறவு நியாயவிலை பகுதிநேரக் கடை மாதத்தில் ஒரு நாள் மட்டுமே திறக்கப்  பட்டு பொருட்கள் வழங்குவதாகக் கூறப்படு கிறது. ஜூன் மாதத்தில் கடந்த 15 நாட்க ளுக்கு மேலாகியும் கன்றாம்பல்லி நியாய விலைக் கடை திறக்கப்படவில்லை. குடும் பத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, எண்ணெய்,  பருப்பு ஆகியவற்றை வாங்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக  பகுதிநேர நியாயவிலைக் கடை திறக்கப் படாததால் பொதுமக்கள் வட்ட வழங்கல் அலு வலர், மாவட்ட வழங்கல் அலுவலர், மாவட்ட  ஆட்சியர் ஆகியோருக்கு புகார் தெரி வித்துள்ளனர். இதுகுறித்து ஆம்பூர் வட்ட வழங்கல் அலுவலர் செந்தமிழ் செல்வியை கேட்ட தற்கு, கடை மூடியே இருப்பது குறித்த தக வல் தற்போதுதான் தெரிய வந்துள்ளது. விற்  பனையாளர் பற்றாக்குறை நிலவுகிறது. கடை  திறக்கவும், பொதுமக்களுக்குத் தேவை யான பொருட்கள் வழங்கவும் உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.