tamilnadu

img

ஆம்பூரில் புத்தக கண்காட்சி

ஆம்பூர், நவ. 26- வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகர தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் பாரதி புத்தகால யமும் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி  நவம்பர் 18 ஆம் தேதி  முதல் நடைபெற்று வரு கிறது. இதில் ஒவ்வொரு நாளும் பள்ளிக் குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  பள்ளி மாணவ மாணவிகளுக்கான வினாடி வினா போட்டி நடைபெற்றது. அத னைத் தொடர்ந்து சிறப்பு கருத்தரங்கு நடை பெற்றது. இந்த கருத்தரங்கிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் தலைவரும், ரோட்டரி சங்கத்தின் தலைவருமான  சி.  குணசேகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி வரவேற்றார். வித்யா விகார் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தலைவர் கே .குப்புசாமி, ஆம்பூர் வணிகர் சங்கத் தலைவர் கிருஷ்ணன்,  சுக்குர் பள்ளி யின் தலைவர் வாத்தி கலீல், கீதா நடராஜன்,  ராபர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் புத்தகத்தின் அவசி யம் குறித்து பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா விரிவாகவும் விளக்கமாகவும் பேசி னார். நிறைவாக தமிழ்நாடு அறிவியல் இயக்  கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ராமன் நன்றி கூறினார்.