வேலூர், அக்.21- அரக்கோணத்தை தலைமையிட மாக கொண்டு புதிய மாவட்டம் உரு வாக்க வலியுறுத்தி கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி அறிவித்தார். இதை கண்டித்து அரக்கோணம் நகரில் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடையடைப்பு, மனித சங்கிலி போராட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தது. இந்த நிலையில் அரக்கோணம் அனைத்து சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் அரக்கோணம் நகரம் முழுவதும் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த னர். அதற்காக அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதியில் இருந்து நகரம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கருப்பு கொடி கட்டி வைத்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தும் அரக்கோணம் நகர காவல்துறை யினர் அரக்கோணம் நகரில் கட்டி வைத்திருந்த கருப்பு கொடிகளை அகற்றினார்கள்.மேலும் அரக் கோணம் நகரில் எங்கும் கருப்பு கொடி கட்ட விடாமல் தடுக்க ஏராள மான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பின்னர் அனைத்து சங்கங்க ளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பா ளர்கள் கே.எம்.தேவராஜ், நைனா மாசிலாமணி ஆகியோர் தலைமை யில் நிர்வாகிகள் அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து கருப்பு கொடியை அகற்றிய காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் கூறு கையில், “அரக்கோணத்தை தலை மையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறோம். யாருமே எதிர்பார்க்காத வகையில் ராணிப்பேட்டையை தலைமையிட மாக கொண்டு புதிய மாவட்டம் உரு வாக்கப்பட்டது. நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்” என்றனர்.