வேலூர், அக்.15- ஆற்காடு பவுட்டா பீடி கம்பெனியில் சுமார் 600 தொழிலாளர்கள் வேலை செய்கி றார்கள். இதில், உரிமையாளர்களுக்கும் பீடி பிரான்சின் உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரண மாக பீடி உரிமையாளர்கள் கடந்த 12 நாட்க ளாக தொழிலாளர்களுக்கு, வேலை வழங்கா மல் சட்ட விரோதமாக கதவடைப்பு செய் துள்ளனர். இதை கண்டித்து பீடி தொழிலாளர் சமே ளனத் தலைவர்(சிஐடியு) எம்.பி.ராமச்சந்தி ரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சட்ட விரோத கதவடைப்பை கண்டித்து முழக்கமிட்டனர். மாவட்டச் செயலாளர் வி. நாகேந்திரன்,சிபிஎம் வட்டச் செயலாளர் செல்வம், நகரச் செயலாளர் டி.சத்திரன், சுப்பிரமணியம், வினாயகம் ஆகியோர் உரையாற்றினர். இந்த பிரச்சனை குறித்து செய்தியாளர்க ளுக்கு பேட்டியளித்த எம்.பி.ராமச்சந்திரன், “சென்னை வண்ணாரப்பேட்டையை தலை மையிடமாகக் கொண்டு செயல்படும் பவுட்டா பீடி கம்பெனியில் ஆற்காடு, விஷா ரம், திமிரி பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத் திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். கம்பெனி நிர்வாகம் சட்டவிரோதமாக கத வடைப்பு செய்துள்ளதால் பீடி லேபில் ஒட்டும் பெண் தொழிலாளர்கள் 200 பேர் உட்பட ஆயிரம் தொழிலாளர்கள் கடந்த 12 நாட்க ளாக வேலையின்றி பசி, பட்டினியால் அவ திப்பட்டு வருகிறார்கள். கம்பெனியை திறக்கும் வரைக்கும் அந்த தொழிலாளர்க ளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். உட னடியாக கம்பெனியை திறக்க வேண்டும். இல்லையென்றால், கம்பெனியை முற்று கையிட்டு, திறக்கும் வரை போராட்டம் நடத்து வோம். தொழிலாளர் நலத்துறை அலுவ லர்கள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.