விழுப்புரம், அக். 2- மக்கள் நலனுக்கு போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சங்கராபுரம் வட்டத் தில் பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்ற வலி யுறுத்தி மக்கள் கோரிக்கை மாநாடு வியாழனன்று (அக். 3) நடைபெறுகிறது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த வட்டத்தின் மக்கள் தொகை 4,07,970 ஆகும். இதில் 2,06,075 ஆண்களும், 2,01,895 பெண்களும் உள்ள னர். 91,183 குடும்பங்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகையில் 96.2 விழுக்காடு மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். 6 வயதிற்குட் பட்ட குழந்தைகளின் எண் ணிக்கை 51,338 ஆகவுள்ளது. பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,09,862 மற்றும் 47,344 ஆக உள்ளனர். மக்கள் தொகையில் இந்துக்கள் 87 விழுக்காடும், இஸ்லாமியர் கள் 5.67 விழுக்காடும், கிறித்த வர்கள் மற்றும் பிறர் 0.23 விழுக்காடும் உள்ளனர். இந்த வட்டம் முழுவதும் வறட்சியான பகுதியாகவே உள்ளது. அனைத்து கிரா மங்களிலும் குடிநீர் பிரச் சனை தலைவிரித்தாடுகிறது. சங்கராபுரம் நகரத்தில் வாரத் தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள்தான் குடிநீர் வினியோகம் செய்யப்படு கிறது. பெரும்பாலான நாட் கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. எனவே குடிநீர்ப்பிரச்ச னைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி நிரந்தர தீர்வு காண வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு கட்டுப்படி யான விலை கிடைக்க வேண்டும், வறட்சி நிவாரண மாக ஒரு ஏக்கருக்கு 50,000 ரூபாயும், பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின்படி உரிய காப்பீட்டுத் தொகையும் வழங்க வேண்டும், சங்கரா புரத்தில் இருந்து திருக் கோவிலூர் உள்ளிட்ட ஊர்களுக்கு கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்கப் பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜ், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, செயற்குழு உறுப்பினர்கள் எம்.கே. பூவராகன், பி.சுப்பிர மணியன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ச.சசிகுமார், வி.ஏழுமலை மு.சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.