tamilnadu

img

சிபிஎம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

விழுப்புரம், ஜூலை 11- கிராமத்தில் நூறு நாள் வேலை வழங்க  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட முட்ராம்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் மனு  கொடுக்கும் போராட்டம் கிளைச் செயலாளர்  எம்.கே.பலராமன் தலைமையில் நடை பெற்றது. நூறு நாள் வேலையை தொடங்கி பதிவு பெற்ற அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், சட்டப்படியான கூலி ரூ.229 வழங்க வேண்டும், குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆதிதிராவிடர் பயன்படுத்தும் சுடுகாட்டுப் பாதையில் சிமெண்ட் சாலை  அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சங்கரன், ஒன்றியச் செயலாளர் கே.குப்பு சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் பி.சௌந்தர ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.