tamilnadu

img

மாணவர்களுக்கு பரிசளிப்பு

திருக்கோவலூர், மே 7-விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலையில் கோடைக் கால சிறப்புப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஆண்டுதோறும் திருக்கோவலூர் தமிழ்ச்சங்கம் சார்பில் கோடை கால சிறப்புப் போட்டிகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களில் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப் படுகின்றன். அதன்படி, இந்த ஆண்டு “வனவளம் காண்போம்.-மலைவளம் காப்போம்”என்ற தலைப்பில் பேச்சு, கட்டுரைப் போட்டிககள் நடத்தப்பட்டன. பல்வேறு பகுதியைச் சேர்ந்த 85 மாணவர்கள் பங்கேற்றனர்.சங்கத் தலைவர் கவிமாமணி சிங்கார. உதியன் தலைமை வகித்து போட்டிகளைத் தொடக்கி வைத்தார். தமிழாசிரியர் சி.குருராசன், தற்காப்புக் கலை பள்ளித் தாளாளர் என்.கே.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலாளர் பாரதிமணாளன் வரவேற்றார்.கல்வியாளர் அறவாழி தொடக்கவுரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்ற தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் குறிஞ்சி அரங்க செம்பியன், ஆமினா பெண்கள் நலம் மற்றும் கல்வி அறக்கட்டளை செயலாளர் மு.இதயத் துல்லா ஆகியோர் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கிப் பாராட்டிப் பேசினர்.தமிழாசிரியர்கள் சா.சித்ரா, செ.முருகன் வழக்குரைஞர் ப.மகேஷ், நல்லாசிரியர் ராமலிங்கம் நிழற்பட கலைஞர் ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்கத் துணைத் தலைவர் பா.கார்த்திகேயன் நன்றி கூறினார்.