விழுப்புரம், ஜூன் 20- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள செம்மேடு கிராமத் தைச் சேர்ந்தவர் வடிவேலு (35). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது வயலை சமன் செய்வ தற்காக ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி கேட்டு செஞ்சி தாலுகா அலுவலகத்திற்கு சென்று, வட்டாட்சியர் ஆதிபகவானை சந் தித்து அனுமதி கேட்டார். அப்போது வட்டாட்சியர், ரூ. 8 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் ஏரியில் இருந்து மண் எடுக்க அனுமதி வழங்க முடி யும் என்றும், அந்த பணத்தை ஜீப் ஓட்டுநர் கந்தசாமியிடம் கொடுக்கு மாறு கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத வடிவேலு இதுபற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் வடிவேலுவிலுவிடம் ரசாயன பொடி தடவிய ரூ. 8 ஆயிரத்தை கொடுத்து வட்டாட்சியரிடம் வழங்குமாறு கூறினார். இதையடுத்து தாலுகா அலுவலகத் துக்கு சென்ற வடிவேலு அந்த பணத்தை ஜீப் டிரைவர் கந்தசாமியிடம் கொடுத்தார். அதன்பிறகு காந்தசாமி அந்த பணத்தை வாட்டாட்சியரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆதிபகவானையும், டிரைவர் கந்தசாமியையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்து, 8 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த சில ஆவணங்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.