tamilnadu

திருப்பூர் ரயில் கோரிக்கை: எம்.பி.க்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி நன்றி

திருப்பூர், ஆக. 31– பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூருக்கு கூடுதல் ரயில் மற்றும்  ரயில் நிலைய வசதிகளை மேம்ப டுத்துவது தொடர்பாக இம்மாவட் டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப் பினர்கள் முயற்சி மேற்கொண்டிருப்ப தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் திருப்பூர் மாவட்ட மக் களின் ரயில்வே தொடர்பான கோரிக் கைகளை நிறைவேற்ற தென்னக ரயில்வே நிர்வாகம் அரசியல் பாரபட்சம் பார்க்காமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் செ.முத்துக்கண்ணன் கேட்டுக் கொண் டிருக்கிறார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில் செ.முத்துக்கண்ணன் சனி யன்று விடுத்துள்ள செய்தியறிக்கையில் கூறியிருப்பதாவது: பின்னலாடைத் தொழில் நகரமான  திருப்பூருக்கு தமிழகத்தில் மட்டு மின்றி, நாட்டின் பிற பகுதிகளில் இருந் தும் பல்லாயிரக்கணக்கான தொழி லாளர்கள் வேலை தேடி வருகின்ற னர். அத்துடன் தொழில், வர்த்தகம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு  தேவைகளுக்காக இங்கிருந்தும் ஆயி ரக்கணக்கானோர் தமிழகத்தின் இதர பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் சென்று வரும் நிலை அதிகரித்து வரு கிறது.

இதைக் கருத்தில் கொண்டு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் விரிவான கலந் தாலோசனை நடத்தி ரயில்வே தொடர் பான கோரிக்கை பட்டியல் உருவாக் கப்பட்டது. இந்த கோரிக்கைகளை மத்திய அரசு மற்றும் ரயில்வே நிர்வா கத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று  நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக,  இம்மாவட்டத்தைப் பிரதிநிதித்து வப்படுத்தும் திருப்பூர், கோவை, ஈரோடு, பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கோரிக்கை அடிப்படையில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர், திருப்பூருக்கு கூடுதல் ரயில் உள்ளிட்ட  கோரிக்கைகளை, தென்னக ரயில்வே  பொது மேலாளருக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தி இருக்கிறார். மேலும், செப் டம்பர் முதல் வாரத்தில் சென்னையில் தென்னக ரயில்வே பொது மேலாளர் நடத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலும் பங்கேற்று இதை வலி யுறுத்தப் போவதாகவும் பி.ஆர்.நட ராஜன் கூறியிருக்கிறார். அதேபோல் திருப்பூர் நாடாளுமன் றத் தொகுதி உறுப்பினர் கே.சுப்பராய னும் சனியன்று திருப்பூர் ரயில் நிலை யத்தில் ஆய்வு மேற்கொண்டு, ரயில்வே  தொடர்பான மக்களின் கோரிக்கை களைக் கேட்டறிந்திருக்கிறார். பொள் ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரமும் இது குறித்து முயற்சி மேற்கொண்டி ருக்கிறார். 

மார்க்சிஸ்ட் கட்சி முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டுள்ள எம்.பி.க்கள் பி.ஆர்.நடராஜன், கே.சுப்பராயன் மற்றும் சண் முகசுந்தரம் ஆகியோருக்கு திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் நன்றி தெரிவித் துக் கொள்வதுடன், இக்கோரிக்கை களை நடைமுறைப்படுத்த ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்வ தாக மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் கூறியிருக்கிறார்.