tamilnadu

img

பத்திரப் பதிவை சிடியாக பெற கட்டணம் ரூ.100 ஆக உயர்வு

சென்னை,பிப்.1- பத்திரப்பதிவு நிகழ்வுகளை, வெப் கேமரா வாயிலாக பதிவு செய்து, அந்த காட்சிகளை, சிடி’யாக வழங்கும் திட்டம் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது, சிடி வழங்கும் பணிகளை மேற்கொள்ள, எல்காட் வாயிலாக, ஒப்பந்த நிறுவனம் நியமிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலா பிறப்பித்த உத்தரவில், ஒவ்வொரு பத்திரப் பதிவுக்கும், சிடி வழங்க, தற்போதுள்ள, 50 ரூபாய் கட்டணம், 100 ரூபாயாக உயர்த்தப் பட்டிருப்பதாக கூறியுள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருவதாக, பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

;