tamilnadu

img

வேலையில்லா திண்டாட்டத்தை போக்க நடவடிக்கை எடுத்திடுக!

மத்திய - மாநில அரசுகளுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, நவ. 29- “வேலையில்லாத் திண் டாட்டத்தைப் போக்கவும், ஐ.டி.  நிறுவனங்களில் இருந்து ஊழி யர்கள் நீக்கப்படுவதைத் தடுக்க வும் மத்திய - மாநில அரசுகள் நட வடிக்கைகளை எடுக்க வேண்டும்  என திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத் துள்ள அறிக்கையில்,“கோவை மாநகராட்சியில் 549 துப்புரவுப் பணியாளர்கள் வேலைக்கு பொறியாளர்களும், பட்டதாரி களும் விண்ணப்பித்தார்கள்” என்ற செய்தி ; ஊழலையே முழு நேர வேலையாகக் கொண்டி ருக்கும் அ.தி.மு.க. ஆட்சியில், தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவிற்கு கோர ரூபம் எடுத்துத் தாண்டவ மாடுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. புதிய தொழில்கள், வேலை வாய்ப்புகள் எதையுமே  உரு வாக்காமல் - உருவாக்குவது குறித்துச் சிந்தித்துக் கூடப் பார்க்காமல், அதைப் பற்றிய எவ்விதக் கவலையும் கொள்ளா மல், இளைஞர்களின் எதிர்காலத்  தைப் பாழ்படுத்தி வரும் அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்டுள்ள இந்த அவல நிலை, தமிழ்நாட் டிற்கு மிகப்பெரிய சாபக்கேடாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஐ.டி.  நிறுவனங்கள் எல்லாம், ஏற்க னவே ஏதாவது ஒரு ‘செயற்கைக் காரணத்தை’ சுட்டிக்காட்டி, ஊழி யர்களை பணியிலிருந்து நீக்கி வீட்டுக்கு  அனுப்பி வருகின்றன.இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும், பா.ஜ.க. அரசின் தவறான பொரு ளாதாரக் கொள்கையால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.டி. ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. மத்திய - மாநில அரசுகள் ஐ.டி. ஊழியர்களின் பணிக்கு ஏற்பட்டுள்ள அபாயம் குறித்து - அதைத் தடுப்பதற்கு அக்கறை  காட்டவும் இல்லை, கவலைப்பட வும் இல்லை என்பது கடும் கண்ட னத்திற்குரியது. இது போன்ற வேலையில்லாத் திண்டாட்டத்தின் உச்சக்கட்டம் தான்; பொறியாளர்களும், பட்ட தாரிகளும் துப்புரவுப் பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கும் மிகப் பரிதாபமான கட்டாயத்தை உருவாக்கியிருக்கிறது. நாட்டின் எதிர்காலம் என்று கருதப்படும் இளைஞர்களின் வாழ்வுடன் மத்திய - மாநில அரசு கள் இது மாதிரியொரு ஈவு இரக்க மற்ற விளையாட்டை நடத்திக் கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது.

ஆகவே, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கவும், ஐ.டி. நிறுவனங்களிலிருந்து கொத்துக் கொத்தாக ஊழியர்கள் நீக்கப்படுவதை உடனடியாகத் தடுக்கவும் மத்திய பா.ஜ.க. அர சும், இங்குள்ள அ.தி.மு.க. அரசும்  உரிய உருப்படியான நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.