சென்னை, அக். 10- தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐஏஎஸ் அதி காரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அரியலூர் மாவட்ட ஆட்சிய ராக இருந்த டி.ஜி.வினய், மதுரை மாவட்ட ஆட்சியராக நிய மிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியராக டி. ரத்னா நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலின் பதவிக் காலம் முடிந்ததையடுத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத் துறை செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப் பட்டுள்ளார். அரசு போக்குவரத்து முதன்மைக் கழக செயலாள ராக சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா மற்றும் கலாச்சாரதுறையின் கூடுதல் தலைமைச் செயலராக அசோக் டோங்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை செயலர் தீரஜ் குமார் எரிசக்தி துறையை கூடுதலாக கவனிப்பார் என தெரி விக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற நிதி கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக தலைவராக அபூர்வ வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பத்துறை செயலராக இருந்த சந் தோஷ் பாபுவுக்கு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங் கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக இணை மேலாண் இயக்குநராக எஸ். வினீத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.