tamilnadu

img

சாதி வெறியையும் தூண்டிவிட்ட சவுகிதார்

மும்பை, ஏப்.18- லலித் மோடி, நீரவ்மோடி, நரேந்திர மோடிஎன யாராக இருக்கட்டும், நாட்டைக் கொள்ளையடித்த திருடர்கள் அனைவரின் பெயருக்குப் பின்னாலும் மோடி என்று வருவது விசித்திரமான ஒற்றுமையாக இருக்கிறதே என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். இந்நிலையில், மோடி என்ற பெயர்களில் இருப்பவர்கள் திருடர்களாக இருக்கிறார்கள் என்று கூறியதன் மூலம், தான் சார்ந்த ‘மோடி’ சாதியினரையே ராகுல் அவமானப்படுத்தி விட்டார் என்று மோடி கூறியுள்ளார்.“காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள்எல்லாம், சமூகத்தில் உள்ள அனைத்து மோடிக்களும் திருடர்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சியும் நான் சார்ந்திருக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைத் தொடர்ந்து அவமானப்படுத்துகிறார்கள். இப்போது அவர்கள் எல்லையை மீறி நடந்து கொள்கிறார்கள், ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தையே கொச்சைப்படுத்துகிறார்கள். ஒரு சமூகத்தை அவமானப்படுத்த அவர்களுக்கு துணிச்சல் இருந்தால், நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்” என்று சாதிவெறியைத் தூண்டி விட்டுள்ளார்.

;