tamilnadu

img

கார் பார்க்கிங் எதிரில் “சீசன்” வியாபாரம் அனுமதி கோரி மதுரை ஆட்சியரிடம் சிஐடியு மனு

மதுரை, டிச.19- மதுரை எல்லீஸ்நகர் பகுதியில் மீனாட்சி யம்மன் கோவிலுக்கு சொந்தமான கார் பார்க்  சிங் உள்ளது . இந்த பகுதியில் சபரிமலை அய்யப்பன் கோவில் சீசனை ஒட்டி பக்தர்  கள் நவம்பர் , டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங் களில் வருகை தருகிறார்கள். அய்யப்பன் கோவில் சீசனை ஒட்டி கார் பார்க்கிங் எதிரில் சாலையோரத்தில் சாலையோர வியாபாரி கள் வியாபாரம் செய்து வருகிறார்கள் ‘. இந்த நிலையில் கடந்த நவ.25-ஆம் தேதி சாலை யோரத்தில் வியாபாரம் செய்த இரண்டு பெண்களிடம் காவல்துறையினர் வியாபாரம் செய்யக் கூடாது என்று கூறியுள்ளார்கள். எஸ்.எஸ்.காலனி காவல்நிலைய ஆய்வாளரி டம் முறையீடு செய்ததையொட்டி “சாலை ஒரத்தில் இடையூறுகள் இன்றி வியாபாரம் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார். சட்டம்-ஒழுங்கு துணை ஆணையரும் மாநகராட்சி கொடுத்துள்ள சாலையோர வியாபாரிகள்  அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வியா பாரம் செய்யலாம் எனக் கூறியுள்ளார். ஆனால், போக்குவரத்து காவல்துறை யினர் சாலையோர வியாபாரிகளை வியா பாரம் செய்ய அனுமதிக்கவில்லை. ஆட்சி யர், மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தலையிட்டு எல்லீஸ் நகர் கார் பார்க்கிங் எதி ரில் சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டுமென சாலை யோர வியாபாரிகள் சங்க மாவட்டப் (சிஐடியு) பொதுச் செயலாளர் எஸ்.சந்தியாகு, சிஐடியு மாவட்டத் தலைவர் இரா.தெய்வராஜ், செய லாளர் இரா.லெனின் உள்ளிட்ட சாலை யோர வியாபாரிகள் திங்களன்று ஆட்சியரி டம் கோரிக்கை மனு அளித்தனர்.