இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கூடம் கேட்டு வாலிபர் சங்கம் கரூர் ஆட்சியரிடம் மனு
கரூர், ஏப்.28- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சிவா, மாவட்டத் தலைவர் சதீஸ் ஆகியோர் தலைமையில் கோரிக்கை மனு, மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. அம்மனுவில், கரூர் மாவட்டம், திண்டுக்கல் பிரதான சாலையில் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக தாந்தோணிமலை கடைவீதியில் செயல்படும் அரசு மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும். கரூர் மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கூடம் அமைத்து கொடுக்க வேண்டும் என கூறி இருந்தனர். ராயனூர் கிளை செயலாளர் ராஜேந்திரபிரசாத், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் தயாநிதி, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்