அழகுஜோதி அகாடமி பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வாலிபர், மாணவர் சங்கம் வலியுறுத்தல்
சிபிஎஸ்இ பள்ளி என ஏமாற்றி பல கோடி ரூபாய் சுருட்டல்
மயிலாடுதுறை, மே 8 - சிபிஎஸ்இ பள்ளி என 18 ஆண்டு களாக ஏமாற்றிய அழகுஜோதி பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி மயி லாடுதுறை வட்டாட்சியர் அலுவல கம் முன்பு இந்திய மாணவர் சங்கம் - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டன. வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ஐயப்பன் தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர் சங்கத்தின் மாநிலச் செய லாளர் அரவிந்தசாமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அறிவழகன், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அமுல்காஸ்ட்ரோ, பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் சார்பில் பாலா மற்றும் இரு சங்கங்களின் நிர்வாகி கள் உரையாற்றினர். மயிலாடுதுறை காவேரி நகரில் அழகுஜோதி அகாடமி வித்யாலயா என்ற பள்ளி கடந்த 18 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு மழலை யர் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை நடத்தப்படுகிறது. மாநில கல்வி பாடத்திட்டத்தின் (பிரைமரி அண்ட் நர்சரி) அனுமதியை வைத்துக் கொண்டு, சிபிஎஸ்இ பள்ளி என்று கூறி பாடம் நடத்தியதுடன், கல்விக் கட்டணமாக பல மடங்கு வசூலிக்கப் படுகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டதற்கு, உரிய பதில் தரவில்லை. தொடர்ந்து பல்வேறு போராட் டங்கள் நடந்தும் நடவடிக்கை இல்லை. பலமுறை நடந்த பேச்சு வார்த்தையிலும் முறையான பதில் இல்லை. பள்ளி நிர்வாகம் மாணவர் களை சேர்க்கும்போது ‘சிபிஎஸ்இ இண்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் ஸ்கூல்’ என பொய் சொல்லி ஏமாற்றி மாணவர்களின் பெற்றோரிடம் பல லட்ச ரூபாய் பணத்தை பறித்து உள்ளது. இதுகுறித்து கேட்ட பெற்றோரை பள்ளி நிர்வாகத்தினர் அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும், பள்ளி நிர்வாகத்தினர் மீது சட்ட நடவ டிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளியை இழுத்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். ஆனால் அதிகாரி கள் நடவடிக்கை எடுக்கவில்லை. பெற்றோர்களை ஏமாற்றி கோடிக் கணக்கில் கொள்ளையடித்த அழகு ஜோதி அகாடமி பள்ளி மீது நடவ டிக்கை எடுக்க கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத் திற்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். துரைராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டா லின் ஆகியோர் கலந்து கொண்ட னர். தொடர்ந்து கோட்டாட்சியருடன் நடந்த பேச்சுவார்த்தையில், உடனடி யாக இப்பிரச்சனை சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப் பட்டது. இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.