இளம் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை
வன்முறை சம்பவங்களின் கூடா ரமாக மாறியுள்ள பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் சீதாபூரில் இளம் பத்திரிகையாளர் ஒருவர் வீட்டிற்கு சென்று கொண்டி ருந்தபோது அடையாளம் தெரி யாத நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள் ளது. சனிக்கிழமை அன்று சீதாபூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் (NH-30) தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் இளம் செய்தியாளர் ராகவேந்திர பாஜ் பாய் (வயது 35) வீட்டிற்கு சென்றுகொண்டி ருந்தார். அப்போது அவருடைய இரு சக்கர வாகனம் மீது மற்றொரு வாகனம் ஒன்று மோதியுள்ளது. நிலை தடுமாறி ராகவேந்திர பாஜ்பாய் கீழே விழ, 3 பேர் கொண்ட கும்பல் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. மார்பு மற்றும் தோள்பட்டையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால் ராகவேந்திர பாஜ்பாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை யினர் விசாரணை நடத்தி வரு கின்றனர். முறைகேடுகளை அம்பலபடுத்தியதற்காக... மஹோலி தாலுகாவில் நெல் கொள்முதல் மற்றும் நில ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, அதனை செய்தி வாயிலாக வெளிக்கொண்டு வந்ததால் ராகவேந்திராவுக்கு கடந்த சில நாள்களாகவே அச்சுறுத்தல்கள் வந்தன. இந்த கொலை சம்பவத்துக்கு முன்னதாக ஒரு அழைப்பு வந்தவுடன்தான் ராகவேந்திரா வெளியே சென்றார் என ராகவேந்திராவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் இளம் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத் திற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.