அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மகளிர் தின கருத்தரங்கம்
சர்வதேச மகளிர் தினத்தை முன் னிட்டு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மனித சங்கிலி இயக் கம் மற்றும் மகளிர் கருத்தரங்கம் சனியன்று நடைபெற்றது. அனைத்து அலுவலகங்களி லும் விசாகா கமிட்டி அமைக்க வேண் டும். பெண்களுக்கு எதிரான பாலி யல் வன்கொடுமைக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், மனித சங்கிலி மற்றும் கருத்தரங்கம் நடை பெற்று வருகிறது. இதன்ஒருபகு தியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனித சங்கிலி இயக்கமும், தாமஸ் கிளப்பில் கருத் தரங்கமும் நடைபெற்றது. மாவட்ட மகளிர் துணைக்குழு பொறுப்பா ளர் வி.சாந்தி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ச.ஜெகநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் ஆர். மாலதிராணி வரவேற்றார். இதில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஜோதி மணி துவக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ப. செந்தில் குமார் சிறப்புரையாற்றினார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் ப.நடராஜன் மற்றும் நிர்வாகிகள், ஏ.பிரகலதா, நிர்மலா, ஆர்.ரவி ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் வி. சோமசுந்தரம் நிறைவுரையாற்றி னார். முடிவில், எம்.நதியா நன்றி கூறினார். தருமபுரி இதேபோன்று, சிஐடியு தரும புரி மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் ஏ.தெய்வானை தலைமை வகித் தார். மாவட்ட மகளிர் துணைக்குழு உறுப்பினர் பி.மகேஸ்வரி வரவேற் றார். மாவட்டத் தலைவர் எம்.சுருளி நாதன் ஒருங்கிணைத்தார். ‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்’ என்ற தலைப்பில் முன்னாள் மாநில துணைத்தலைவர் கோ.பழனியம் மாள், ‘கனவுகள் மெய்பட காண் போம்’ என்ற தலைப்பில் மாநில துணைப் பொதுச்செயலாளர் அண்ணா குபேரன் ஆகியோர் கருத்துரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் அன்பழகன், இணைச் செயலாளர் கே.தேவகி, மகளிர் துணைக்குழு உறுப்பினர்கள் உட் பட பலர் கலந்து கொண்டனர்.