சென்னை, டிச.20- பாஜக தலைவர் அண்ணாமலை கட்டி யிருப்பது ரபேல் வாட்ச் என்று அவரே கூறி யிருக்கும் நிலையில், அது உண்மையில்லை, உண்மையில் அந்த வாட்ச் கர்நாடகாவைச் சேர்ந்த காபி கடை முதலாளி “பரிசாக” கொடுத்தது என்ற புதிய தகவல் வெளியாகி யுள்ளது. பாஜக தலைவர் கே. அண்ணாமலை தன்னை ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்த வர் என்று சொல்லிக்கொண்டாலும், தேர்தல் ஆணையத்தில் பல கோடிக்கு சொத்து மதிப்பைக் காட்டியிருந்தார். இந்நிலையில் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச் ரூ. 3.50 லட்சம் முதல் 4.40 லட்சம் ரூபாய் மதிப்பு மிக்கது என்ற தகவல் வெளியாகி சர்ச்சையாக மாறியது. அண்ணாமலை கட்டும் வாட்ச்-சின் விலையே 5 லட்சம் என்றால், அவரிடம் பணம் எந்த அளவிற்கு குவிந்திருக்கும்.. இன்னும் இதுபோன்று ஆடம்பரமான பொருட்கள் என்னவெல்லாம் இருக்குமோ? என்று கேள்விகள் எழுந்தன. 5 லட்ச ரூபாய்க்கு வாட்ச் கட்டுபவர்தான் ஏழையா..? விவசா யக் குடும்பத்தைச் சேர்ந்தவரா? என்றும் விவாதங்கள் முன்னுக்கு வந்தன.
இதையடுத்து, தனது 5 லட்ச ரூபாய் வாட்ச் குறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை, “இந்தியாவிடம் சீனா வாலாட்ட நினைக்கி றது. இதற்கு காரணம் ரபேல் விமானங்கள். ரபேல் விமானங்கள் வந்த பின் நம்முடைய போர் வியூகங்கள் மாறி உள்ளன. நான் கட்டி யிருக்கும் வாட்ச், ரபேல் விமான பாகங்களை வைத்து செய்தது. ரபேல் விமான பாகங்களை வைத்து 500 வாட்சுகளை செய்தார்கள். இது அதன் சிறப்புப் பதிப்பு. உலகில் 500 பேரி டம் மட்டுமே இந்த வாட்ச் இருக்கிறது. அதில் ஒன்று என்னிடம் இருக்கிறது. அந்த விமா னத்தில் உள்ள பாகங்கள் இதில் இருக்கும்” என்று புதிய கதை ஒன்றை அவிழ்த்து விட்டார். மேலும் இந்த கடிகாரம் வாங்கிய ரசீது என்னிடம் இருக்கிறது. அதை வெளியிடு வேன். அதை வெளியிட்டபின் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என்றும் அண்ணாமலை, பயத்தை வெளிக் காட்டாமல் ஜம்பம் அடித்திருந்தார். இதையடுத்து தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “பிரான்ஸ் நிறு வனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடி காரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட் சத்துக்கும் மேல் விலையுள்ள ரபேல் வாட்சை (Rafale watch), வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளு கர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால், எளி யவர்களும் வாங்கி மகிழலாம். செந்தில் பாலாஜி வெளிநாட்டு வாட்சை கட்டியிருக் கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடி காரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம் போல எக்செல் சீட் (excel sheet) ஏமாற்று வேலைதான் வருமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால், அண்ணா மலை வாட்ச் வாங்கிய பில்லுக்கான ரசீதை வெளியிடவில்லை.
இதுகுறித்து, டுவிட்டரில் பதிவிட் டுள்ள திமுக மாண வரணி தலைவர் ராஜிவ் காந்தி “கடி காரம் வாங்கிய ரசீதை வெளியிட அண்ணாமலை தயங்கக் காரணம்! வாங்கிய ஆண்டு 2021 இல்லையாம்.. 2016-ஆம்! ரசீது ஒரு கர்நாடக காபி கடை முதலாளி பெயரில் உள்ளதாம்!” என்று புதிய தகவலை கொளுத் திப் போட்டுள்ளார். மேலும், இந்த வாட்ச் விவகாரத்தை “தேர்தல் அபிடவிட்டில் ஏன் சொல்லல? அதையும் தாண்டி, ஏன் அந்த நிறுவனம் கர்நாடக சிங்கத்துக்கு (இப்ப ஆடு) லஞ்சம் கொடுத்தது!” என்று கேட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல், “அண்ணாமலை கட்டியுள்ள வாட்ச்-சின் விலை ரூ. 8 லட்சத்திற்கும் மேல். அந்த வாட்சின் நிறு வனம், ஆடம்பர வாட்ச்-சுகளை செய்யும் பெல் அண்ட் ரோஸ் (bell and ross) என்ற சுவிச்சர்லாந்த் நிறுவனம்! அண்ணா மலை இதில் தேசியவாதி என பெருமை கொள்ள எதுவும் இல்லை. அதன் விலையும் குறைவு இல்லை. இதை இவருக்கு யார் பரி சாக கொடுத்தார் என்பது தான் கேள்வி? என் றும் ராஜீவ் காந்தி குறிப்பிட்டுள்ளார். முன்னதாக “தனது சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன்” என்று அண்ணாமலை கூறியிருந்த நிலையில், “சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளி யிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து ‘பல்பு’ வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் (அண்ணாமலை) என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில், பாஜக-விலிருந்து நீக்கப் பட்ட காயத்ரி ரகுராம், ரபேல் வாட்ச் விவகா ரத்தில் அண்ணாமலையை பெயர் குறிப்பிடா மல் டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். “தேர்தலுக்கு முன் வேட்பாளர்களின் சொத்துக்களை அறிவிப்பது பெரிய விஷயமல்ல. கறுப்புப் பணத்தை யாரும் அறிவிக்கப் போவதில்லை, குடும்பம் -உற வினர்களின் சொத்தை யாரும் அறிவிக்க மாட்டார்கள்.. இப்போதெல்லாம் நெருங்கிய நண்பர்கள் பினாமிகள். யாரும் சுத்தமாக இல்லை. ஊழலுக்கு முடிவே இல்லை. ஒரு மனிதனின் வளர்ச்சி மக்களால் பாராட்டப்படு கிறது. ஒருவரின் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதீர்கள். ஆனால் ஊழல் பெருகினால் நாம் கண்டிக்க வேண்டும். மக்கள் கண்டிப்பார்கள். இந்த செய்தி அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும்” என்று கூறியுள்ளார். அத்துடன், “பிரதமர் மோடி ஊழலுக்கு எதிரானவர். ஊழல் செய்ப வர்களை அவர் விடமாட்டார்” என்றும் அண்ணாமலையை மனத்தில் வைத்து அவர் கூறியுள்ளார்.