tamilnadu

நீதிக்கு எப்போது நீதி கிடைக்கும்? - கே.ஆறுமுகநயினார்

மதுரை உயர்நீதிமன்றம் முன்பு 30.11. 2022 (புதன்) காலை 10.30 மணிக்கு  40க்கும் மேற்பட்ட டாஃபே நிறுவன தொழிலா ளர்கள் நீதி வேண்டும் என்ற பதாகையுடன் கூடி னர்.  நீதிமன்ற வளாகம் பெரும் பரபரப்புக்கு உள்ளாகியது. உயர்நீதிமன்ற பதிவாளர், சங்க செயலாளர் மற்றும் நிர்வாகிகளை அழைத்து போராட்டம் சம்பந்தமாக விளக்கம் கேட்டார்.  தொழிலாளர்களது நியாயங்களை பரிசீலித்து  நடவடிக்கை எடுப்பதாக பதிவாளர் ஒப்புக்  கொண்டதையொட்டி போராட்டம் கைவிடப் பட்டது.

போராட்டம் ஏன்?

தமிழகத்தில் சிம்சன் குரூப்புக்கு சொந்த மான டாஃபே டிராக்டர் தொழிற்சாலை திண்டுக்  கல் மாவட்டம் கல்லடிப்பட்டியில் உள்ளது.   1998இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சாலை யில் 200 தொழிலாளர்கள் பணியாற்றினர்.  தின மும் 100 டிராக்டர்கள் உற்பத்தியாகின. ஆனால்  பணிபுரிந்த ஒரு தொழிலாளியைகூட நிர்வாகம் நிரந்தரம் செய்யவில்லை. 2005ஆம் ஆண்டு டாஃபே தொழிலாளர் சங்கம் துவக்கப்பட்டது.  தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கேட்டு வழக்கு  தொடர்ந்த காரணத்தால் ஒரே நாளில் 140 தொழி லாளர்களை பணிநீக்கம் செய்தது நிர்வாகம்.  85 நாட்கள் போராட்டத்திற்கு பின்பு தீர்வு கிடைக்காததால் திருச்சி தொழிலாளர் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்றது.

7 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் தொழி லாளர்களுக்கு பாதகமாக தீர்ப்பு வழங்கப்பட் டது. டாஃபே நிறுவனத்திற்கு ஆதரவாக நீதிபதி  செய்த முறைகேடுகள் சம்பந்தமான புகாரை யொட்டி, தீர்ப்பளித்த நீதிபதிக்கு பணிநீட்டிப்பு வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.  மேல்  முறையீட்டு வழக்கு உயர்நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு வரும் சமயங்க ளில் எல்லாம் நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்க வில்லை.  2020ஆம் ஆண்டு வழக்கு இறுதி விசா ரணைக்கு வந்தது.  6 நாட்கள் தொடர் விசா ரணை நடைபெற்றது.  தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் வாதாடினார்.  வழக்கின் இறுதி விசாரணைக்கு நிர்வாகத்தரப்பு வழக்க றிஞர் வருவதை வேண்டுமென்றே தவிர்த்த கார ணத்தால் வழக்கு முடிவுக்கு வரவில்லை.  

அவசரமாக வழக்கை விசாரித்த நீதிபதி

மேற்கண்ட சூழ்நிலையில் மதுரை உயர்நீதி மன்ற நீதிபதி ஸ்ரீமதி அவர்கள் முன்பு வழக்கு  விசாரணை செய்யப்படும் என பட்டியலிடப் பட்டது.  இவரது கணவர் டாஃபே நிறுவனத்து டன் நெருக்கமான உறவில் உள்ளவர்.  ஒன்றிய ஆளுங்கட்சியான பாஜகவில் செல்வாக்கு மிக்க நபர்.  இந்த நீதிபதி முன்பு வழக்கு  நடை பெற்றால் ஒருதலைபட்சமான தீர்ப்பு வர வாய்ப்  புண்டு;  எனவே வேறு நிதிபதி விசாரிக்க வேண்  டும் என உயர்நீதிமன்ற பதிவாளருக்கு மனு  அளித்தோம். இது சம்பந்தமாக நீதிபதி முடிவு செய்வார் என பதிவாளர் தெரிவித்தார். வழக்கமாக இதுபோன்ற கோரிக்கை வந்  தால் வேறு நீதிபதிக்கு வழக்கு மாற்றப்படும். வழக்கை நடத்த நீதிபதிகள் விரும்பமாட்டார் கள்.  ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல்   வழக்கை தொடர்ந்து நடத்த நீதிபதி ஸ்ரீமதி அவர்  கள் பட்டியலிட்டார்.  தொழிலாளர்கள் தரப்பு வழக்கறிஞர் வழக்கில் ஆஜராக முடியாது என விலகிவிட்டதால் வேறு வழக்கறிஞரை அமர்த்தும் சூழ்நிலை உருவானது.   21.11.2022ஆம் தேதி பட்டியலிடப்பட்ட வழக்கை மீண்டும் 23.11.2022 ஒத்திவைப்பதாக  நீதிபதி கூறினார். ஆனால் 23.11.2022இல் வழக்கு  வராமல் 28.11.2022 பிற்பகல் 2 1/4  மணிக்கு என வழக்கு பட்டியலிடப்பட்டது.  வழக்கமாக உயர்நீதிமன்றத்தில் 2 1/4 மணிக்கு பட்டிய லிடப்பட்டால் அந்த வழக்கு அவசரமாக விசா ரித்து முடிக்கப்பட்டு விடும் என்று அர்த்தம்.  சென்னையிலிருந்து மூத்த வழக்கறிஞர் வர வேண்டிய இவ்வழக்கில் அதிரடியாக பட்டி யலிடப்பட்டு வழக்கை விசாரிக்க அவசரம் காட்டினார் நீதிபதி. 28.11.2022ஆம் தேதி வழக்கறிஞர் இல்லாத  நிலையில் 77 தொழிலாளர்கள் ஆஜராகி தங்க ளது நிலையை தெரிவித்தனர்.  ஆனால் நீதிபதி  எதையும் கேட்காமல் தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்துள்ளார்.  நீதிபதியின் இந்த நடவ டிக்கை நீதிமன்ற வரலாற்றில் இல்லாதது.

சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய நீதிபதி

இதே நீதிபதி சமீபத்தில் சர்ச்சைக்குரிய ஒரு தீர்ப்பை வழங்கினார்.  தமிழக காவலர் ஒரு வர் இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இவருக்கு ‘கர்மா  அடிப்படையில்’ (செய்வினை) அடிப்படையில்  தீர்ப்பு வழங்குவதாக சொல்லி இடமாற்றத்தை ரத்து செய்தார்.  அவரது தீர்ப்பில் ‘கர்மா’ நிய திப்படி இடமாற்றத்தை ரத்து செய்வதாக கூறி னார்.  அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை யில் தீர்ப்பளிக்க வேண்டிய நீதிபதி, மனு தர்மம் அடிப்படையில் தீர்ப்பளித்தார்.  இத்  தீர்ப்புக்கு டிவிஷன் பென்ஞ்ச் தடைவிதித் துள்ளது. 10 ஆண்டுகளாக நடைபெறும் வழக்கில் எதிர்த் தரப்பின் வாதத்தையே கேட்காமல் உயர்  நீதிமன்றம் தீர்ப்பளித்தால் எப்படி நீதியைப் பெற முடியும்?  “தனது ஒரு கண் பறிக்கப்பட்ட நிலையில்,  ஒருவன் இரத்தம் வழிய வந்து நீதி கேட்டாலும்  அவனது எதிரி வரும்வரை அவனுக்கு நீதி  வழங்கிவிடாதே; ஏனெனில் அவனது எதிரி ஒரு வேளை இரண்டு கண்ணும் பறிக்கப்பட்ட நிலை யில் வரக்கூடும்.” - இது நீதிபதிகள் கடைபிடிக்க வேண்டிய புகழ்பெற்ற வாசகம்.  எதிர்த் தரப்பு  வாதத்திற்கு சந்தர்ப்பம் கொடுக்காமல் தீர்ப்ப ளிக்கக் கூடாது.  இது உலகம் முழுவதும் கடை பிடிக்கப்படும் இயற்கை நியதிக் கோட்பாடு.   இவை எதைப்பற்றியுமே கவலைப்படாத சில நீதிபதிகளிடமிருந்து நீதிக்கு எப்போது நீதி  கிடைக்கும்?