கடலூர், ஜூன்.26- கடலூரில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெறுவதையொட்டி 201 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாடு செப்டம்பர் 29, 30. அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் கடலூரில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான வரவேற்புக் குழு அமைப்பு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் பி.தேன்மொழி தலைமை யில் கடலூரில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் வி.மேரி வரவேற்றார்.மாவட்டத் தலைவர் மல்லிகா, மாவட்டச் செயலாளர் பி.மாதவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி, கடலூர் மாநக ராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகி யோர் மாதர் சங்க மாநில மாநாட்டின் நோக்கங்களை விளக்கிப் பேசினர். கடலூர் அனைத்து குடியிருப் போர் சங்க பொதுச் செயலாளர் எம்.மருதவாணன், தலைவர் பி.வெங்கடேசன், விவசாய சங்க மாநிலச் செயலாளர் கோ.மாதவன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.பிரகாஷ், தமுஎகச மாவட்டச் செயலாளர் பால்கி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணன், மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.குமரவேல், ஆசிரியர் சங்கங்களின் மாவட்டச் செய லாளர் தெரசா கேத்தரின், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் வி.சுப்புராயன், சிறுபான்மை நலக்குழு மாவட்டச் செயலாளர் வி.உதய குமார், மாநில துணைத் தலைவர் மூசா,மக்கள் ஒற்றுமை மேடையின் அமைப்பாளர் ஆர்.அமர்நாத், ெஜ.ராேஜஷ் கண்ணன் ஆகியோரும் பேசினர். கவுரவ தலைவராக மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, தலைவராக டாக்டர் ரேணுகா தேவி, செயலாளராக பி.தேன் மொழி, பொருளாளராக எம்.மருதவாணன், உதவி பொருளா ளராக எம்.முத்துகுமாரசாமி உள்ளிட்ட 201 பேர் கொண்ட வர வேற்புக் குழு அமைக்கப்பட்டது.