tamilnadu

img

கூடி வாழும் மீன்கள் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

சமூகமாக செயல்படும்போது வெவ்வேறு குணங்களை உடைய விலங்குகள் ஒரே குழுவாக வாழ உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகின் வடகோளப் பகுதியில் வாழும் எலும்புகளுடன் உள்ள மூன்று ஸ்பைனுடன் காணப்படும் ஸ்டிக்லிஃபேக்(three-spined stickleback) என்ற மீனினத்தில் அவற்றின் நடத்தை மற்றும் கணினி மாதிரிகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்து இதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த மீன்களின் அறிவியல் பெயர் கேஸ்டராஸ்டியஸ் அக்குயூலிட்டஸ் (Gasterosteus aculeatus)).

வெட்கப்படும் மீன்கள் இவை தனித் தனியாக இருக்கும்போது உள்ளதைக் காட்டிலும் குழுவாக செயல்படும்போது இவற்றின் இரை  பிடிக்கும் திறன் அதிகரிக்கிறது. வெட் கப்படுவது வாழ்வில் நாம் விரும்பும் எதையும் செய்யமுடியாமல் நம்மை  தடுக்கிறது என்பது மனிதர்களுக்கு  மட்டும் இல்லாமல் விலங்குகளுக் கும் பொருந்தும் என்பதை இது  எடுத்துக்காட்டுகிறது. குழுவாக இருக்கும்போது இது போன்ற தனிப்  பட்ட குணங்கள் மறைந்துவிடுகின்றன. சமூக சட்டதிட்டங்கள் காரணமாக  இவை குழுவில் தங்கள் தனிப்பட்ட  ஆளுமையை வெளிப்படுத்துவ தில்லை. குழுவாக செயல்படும் போது இவை இரை தேடுவதில் ஆபத்  தான செயல்களில் ஈடுபடத் தயங்கு வதில்லை என்று கண்டறியப்பட் டுள்ளது. பல்வேறு குணங்களை உடைய தனிப்பட்ட மீன்களை ஒரு குழுவாக அமைத்து கூட்டமாக செயல்படவைக்கும்போது இந்தப் பண்புகள் வெளிப்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். “மிக துணிச்சலான குணமுடைய வையும், அதிகமாக வெட்கப்படும் பண்புடையவையும் சாதாரணமாக தனியாக செயல்படும்போது வெளிப்படுத்தும் இது போன்ற குணங்களை கைவிட்டு குழுவுடன் இணைந்து திறமையுடன் செயல் படுகின்றன” என்று ப்ரிஸ்ட்டல் (Bristol) பல்கலைக்கழக ஆய்வாள ரும் ஆய்வுக்கட்டுரையின் மூத்த ஆசி ரியருமான டாக்டர் ஷான் ரேண்ட்ஸ் (Dr Sean Rands) கூறுகிறார். வெவ்வேறு ஆளுமைகள் உள்ள  தனிப்பட்ட அங்கங்கள் எவ்வாறு குழு வில் ஒருங்கிணைந்து செயல்படு கின்றன என்பதை மீன்களை உற்று நோக்கி, கணினி மாதிரிகளை இதற்  காக உருவாக்கி ஆய்வுகள் நடத்தி யதை பீலோஸ் உயிரியல் தொகுப்பு (journal PLoS Computational Biology) என்ற ஆய்விதழில் ஆய்வா ளர்கள் விவரித்துள்ளனர். பாது காப்பான வாழிடத்தில் உள்ள ஒரு  விலங்கு கூட்டம் சிறிது தொலைவில்  இருக்கும் இரை கிடைக்கும் இடத்திற்கு செல்லும் கணினி மாதிரி உருவாக்கப்பட்டு ஆராயப்பட்டது. சமூக ஒழுங்குமுறைகள் இல்லாத போது விலங்குகளின் இடம்பெயர்வு கள் அவற்றின் தனிப்பட்ட குணங்க ளால் மட்டுமே வழிநடத்தப்படு கின்றன. அதிக அல்லது குறைவான  துணிச்சல் உள்ள விலங்குகள் இரை  கிடைக்கும் இடத்திற்கு வேகமாக நகர்  வது தெரியவந்தது. ஆனால் இதே விலங்குகளிடம் சமூக விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது அவற்றின் தனிப்பட்ட குணங்களில்  உள்ள வேறுபாடுகள் குறையத் தொடங்கின.

துணிச்சல்மிக்க மீன்கள்

மீன்களின் நகர்வுகள் குழுவில் இருக்கும் மற்ற உறுப்பினர்களின் நகர்வுகள் மீதே கண் வைத்திருந்தன. அடுத்தவர்கள் செயல்படுவதைப் பார்த்து அதற்கேற்ப அவை தங்கள் நகர்வுகளை மாற்றிக்கொண்டன. இரை இருக்கும் இடத்தை சென்ற டைந்த நேரம் ஆராயப்பட்டது. துணிச்  சல் மிக்க ஒரு தனிப்பட்ட மீன் குழு விலும் அதே போன்ற துணிச்சலு டனேயே நடந்துகொண்டது. ஆனால் மற்றவர்களுடன் இணைந்து ஒரு  குழுவின் குறிக்கோளை நிறைவேற்  றும் பொறுப்பு ஏற்படும்போது அவற் றின் நகர்வுகள் பிற அங்கங்களின் முன்நோக்கிய இடம்பெயர்வைப் பொறுத்தே அமைகிறது. ஒவ்வொரு  மீனும் சுதந்திரமாக தனியாக  செயல்படும்போது வெளிப்படு வதைக் காட்டிலும் குழுவாக இருக்  கும்போது அதிக திறமை வெளிப்படு கிறது. ஒவ்வொரு தனி உயிரினமும் மற்றவர்கள் என்ன செய்கின்றனர் என்பதில் கவனம் செலுத்தும்போது ஒட்டுமொத்த குழுவும் ஒரே இடத்தில்  நீண்ட நேரம் தங்கி நிற்கிறது. ஆனால்  நகரத் தொடங்கியவுடன் அவை வேக மாக இலக்கை சென்றடைகின்றன. குழுவாக இருக்கும்போது இவை  எதிரிகளிடம் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு வெகுவாகக் குறைகிறது. தங்கள் செயல் திட்டத்தை பாது காப்புடன் நடத்துகின்றன. “பல சமூக விலங்குகளுக்கும் அவை குழுவாக செயல்படுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. இது அவற்றின் தனிப்பட்ட ஆளுமையை வலுப்படுத்த உதவுகிறது. குழு எவ்வாறு செயல்படுகிறதோ அதே போல தனிப்பட்ட மீன்களும் நடந்து கொள்கின்றன. இதனால் அதிக  நன்மை ஏற்படுகிறது. குழுவாக  இருக்கும்போது தனிப்பட்ட உறுப்பி னர்களின் ஆளுமைப்பண்புகள் முக்கியமில்லாமல் போகிறது” என்று  ராண்ட்ஸ் கூறுகிறார். குழு நடத்தைப்  பற்றிய இந்த புதிய கண்டுபிடிப்பு  மனிதர்களின் சமூக நடத்தையையும் அதன் மூலம் சமூக செயல்பாடுகளை யும் மேம்படுத்த உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.