மேடை தோறும் தமிழ் தமிழ் என ‘முழங்கு பவர்’ நாம் தமிழர் கட்சியின் சீமான். ஆனால் அவரது கட்சியை சேர்ந்த இரு வேட்பாளர்கள் தமிழில் உறுதி மொழி படிப்பதில் திணறினர். இது சீமானின் கட்சிக்கு பெரும் ‘தர்மசங்கடத்தை’ ஏற்படுத்தியது. இது குறித்து சீமானிடம் கேள்வி கேட்கப்பட்ட பொழுது அதனை நியாயப்படுத்தி பேசிய சீமான், “என் மகன்கள் இருவரும் ஆங்கில வழியில் தான் படிக்கின்றனர். நான் அவமானப்படு கிறேன். என் பிள்ளைகள் தமிழ் படிக்க இங்கே பள்ளிக்கூடங்கள் இல்லை” என்று பிதற்றினார். ஆனால் உண்மை என்ன? தமிழ்நாட்டில் 37,579 அரசுப் பள்ளிகளில் 52.75 லட்சம் மாண வர்கள் தமிழில் படிக்கின்றனர். ஆனால் சீமானின் மகன்களுக்கு மட்டும் தமிழ் படிக்க பள்ளி கிடைக்காமல் போய்விட்டது. சீமானுக்கு அரசு பள்ளிகள் குறித்து தவறான கருத்து இருக்க வேண்டும். அதனை மறைக்க தனது மகன்கள் தமிழில் படிக்க இங்கு பள்ளி இல்லை என கூறுவது பொய் மட்டுமல்ல! அபத்தமும் கூட! ஆனால் சீமானிடம் வேறு எதை எதிர்பார்க்க இயலும்?