இம்பால், பிப்.21- பாஜகவின் ஒரு நாடு, ஒரே மொழி, ஒரே கொள்கை என்ற ஆதிக்க மனப் பான்மைக்கு எதிராக இந்தியாவில் யுத்தம் நடப்பதாக ராகுல்காந்தி தெரி வித்துள்ளார். மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி இம்பாலில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, ‘‘நமது நாட்டின் நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் பேசினேன். அங்கு நமது நாட்டை ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்று நான் வர்ணித்தேன். இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என தாம் கூறியது ஆர்.எஸ்.எஸ்., பாஜக வுக்கு பிடிக்கவில்லை. இந்திய ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் நாட்டில் சம உரிமை உள்ளது. பாஜகவின் கொள்கை க்கு எதிராக நாம் போராடி வரு கிறோம். பாஜக தொலைநோக்கு பார்வை ஒரே கொள்கை, ஒரே மொழி என்ற அடிப்படையில் உள்ளது. பாஜகவின் பார்வை பிற கொள்கை கள், மொழி, கலாச்சாரங்களுக்கு எதி ரான ஆதிக்க மனப்பான்மையுடன் உள்ளது. பாஜகவின் ஆதிக்க மனப்பா ன்மைக்கு எதிராக நாட்டில் யுத்தம் நடக்கிறது. தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக வினர் மணிப்பூருக்கு வரும் போது புரித லுடன் வருவதற்கு மாறாக, ஆதிக்க மனப்பான்மையை நிலைநாட்ட முயற்சிக் கின்றனர். ஆனால், தாம் பணிவுடன் மணிப்பூருக்கு வரும் போது, இம்மாநில மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் இருப்பதாக ராகுல்காந்தி தெரிவித்தார்.