tamilnadu

img

என்எல்சியை பாதுகாக்க, தொழிலாளர், ஊழியர் நலன்காக்க சிஐடியுவிற்கு வாக்களிப்பீர்!

என்எல்சியை பாதுகாக்க, தொழிலாளர், ஊழியர் நலன்காக்க சிஐடியுவிற்கு வாக்களிப்பீர்!

வருகின்ற 25.4.2025 அன்று நெய்வேலி என்எல்சி நிறுவனத் தில் தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் நடை பெற உள்ளது. தமிழகத்தில் உள்ள என்எல்சி நிறுவனம் தேசத்தின் மிகப் பெரிய மின் உற்பத்தி மையமாக திகழ்ந்து வருகிறது.

தமிழகத்தின் மின் தேவைகளை கணிசமான அளவிற்கு பூர்த்தி செய்து வருகிறது.துவக்கத்தில் நெய்வேலி யில் 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி  செய்யக்கூடிய அனல் மின்நிலையம், ஒரு பழுப்பு நிலக்கரி சுரங்கம் இருந்த போது 19 ஆயிரம் தொழிலாளர்கள், ஊழியர்கள் பணியாற்றினார்கள். தொழிலாளர்கள், ஊழியர்கள்,  உழைப் பினால் இந்த நிறுவனம் பிரமாண்ட மாக வளர்ச்சி பெற்றது. தற்போது மூன்று சுரங்கங்களும், 3,390 மெகா வாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய நான்கு அனல் மின் நிலையங்களும் இயங்கி வருகிறது. மேலும்  130 மெகா வாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய (சோலார்) பேனல் அமைப்பும் உள்ளது.  நிறுவனம் பல மடங்கு விரி வடைந்து இருந்தாலும், நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கை  6,576  மட்டுமே.அதே நேரத்தில் காண்ட் ராக்ட், சொசைட்டி தொழிலாளர்கள் சுமார் 12,000 பேர் வேலை செய்கி றார்கள். ஒட்டுமொத்த தொழிலா ளர்கள் எண்ணிக்கை இப்பொதும் 19 ஆயிரமாகத்தான் உள்ளது. நிரந்தர தன்மை உள்ள வேலைகளில் நிரந்தர தொழிலாளர்களை வேலைக்கு எடுப் பதற்கு பதிலாக ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை ஒட்ட சுரண்டுவது ஒன்றிய அரசினுடைய, நெய்வேலி நிர்வாகத்தினுடைய கொள்கையாக உள்ளது. மேலும் கடந்த காலங்களில் நிரந்தர தொழிலாளர்கள் செய்து வந்த நிரந்தரத் தன்மை உள்ள பல வேலை களை காண்ட்ராக்ட் (அவுட்சோர்சிங்) விட்டுள்ளனர்.

இம் முறையை கடைப்பிடிப்பதன் மூலம் பொதுத்துறையை மறைமுக மாக தனியா துறையாக்கக்கூடிய நட வடிக்கைகளையும் நிறுவனம் ஈடு பட்டு வருகிறது.எந்திர பராமரிப்பு உள்ளிட்டு மேல்மண் நீக்கம், அதிகாரி கள் பயன்படுத்தும் வாகனங்கள் இயக்கும் பணி போன்ற  பல பணி கள் அவுட்சோர்சிங் விடப்படுகின்றன. இத்தகைய பின்னணியில் தான் என்எல்சி பொதுத்துறை நிறுவனத்தை, பொதுத்துறை நிறுவனமாகவே  பாது காத்திட போராட வேண்டி உள்ளது. நெய்வேலியில் பரிட்சாத்த குவாரி தோண்டப்பட்ட காலத்தில் இருந்து  இன்றுவரையில் நெய்வேலி நிறு வனத்தை பாதுகாக்க தொடர்ச்சியாக சிஐடியு  ( சங்க பதிவு எண் 1803 /1954) போராடி வருகிறது.பொதுத்துறை நிறு வனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது பாஜக ஒன்றிய அரசின் கொள்கையாக இருக்கிறபோது, கடந்த காலத்தை விட பொது துறையை  பாதுகாக்கும் போராட்டங்களும் முக்கி யத்துவம் பெறுகிறது.நிறுவனத்தை பாதுகாப்பதோடு நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஊழியர்களுடைய நலன்களை பாது காப்பதிலும் துவக்கத்தில் இருந்து சிஐடியு அர்பணிப்போடு போராடி வரு கிறது.நிறுவனத்தில் முதன் முதலாக பஞ்சப்பாடி, போனஸ் உள்ளிட்ட பல சலுகைகளையும், உரிமைகளையும் பெறுவதற்கு சிஐடியு தலைமை யில் பல தோழர்கள் அடக்குமுறை களையும், பல இழப்புகளையும் எதிர் கொண்டுள்ளனர்.  

இந்த பின்னணியில் தான் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம், வாரி சுக்கு வேலை உள்ளிட்ட பல கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு தலை மையில் 1989 ஆம் ஆண்டு கால வரையற்ற உண்ணாநிலைபோராட்டம் நடைபெற்றது.இந்தப் போராட்டம் 6  வது நாள் முடிவுக்கு வந்தது. இத்த கைய உண்ணாவிரதம் மற்றும்  வேலை நிறுத்த போராட்டத்திற்கு பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தில் சிஐடியு, எச்எம்எஸ் சங்கம் வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் ஆக்கி டவும், தொழிலாளர் வாரிசுகளுக்கு வேலை அளிக்கவும் நிர்வாகத்துடன் ஒப்பந்தமானது.

 இதன் அடிப்படையில் தான்  முதற்கட்டமாக 5 ஆயிரம் ஒப்பந்த  தொழிலாளர்களும், இரண்டாம்  கட்டமாக மூன்றாயிரம் ஒப்பந்த  தொழிலாளர்களும், இண்கோ சர்வ் என்ற தொழிலாளர் கூட்டுறவு அமைப்பில் சேர்க்கப்பட்டு அதில் கணி சமான தொழிலாளர்கள் நிரந்தரம் ஆக் கப்பட்டுள்ளனர். தற்போது நிறுவனத் தில் பணியாற்றும் 6,576 தொழிலா ளர்கள், ஊழியர்கள்  நலன்களை பாது காத்திட பல வடிவங்களில் அணுக வேண்டி உள்ளது. சுமார் 1,600 நிரந்தர தொழிலாளர்கள், புதிய ஊதியமாற்று ஒப்பந்தம் அமலுக்கு வர வேண்டிய 1.1.2027 க்கு முன் ஓய்வு பெற உள்ள னர். புதிய ஒப்பந்தத்திற்கு முன்னதாக ஓய்வு பெறக்கூடிய இந்த தொழிலா ளர்களின் நலன்களை பாதுகாக்க சிஐடியு முயற்சிகளை மேற்கொள் ளும். தற்போது ஓய்வு பெற்ற தொழிலா ளர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு மருத்துவ அலவன்ஸ் அதிகபட்சம் ரூ.33 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அதிகாரிகளுக்கு மருத்துவ அலவன்ஸ் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது. ஆனால்  ஓய்வு பெற்ற தொழிலாளர் களுக்கு மருத்துவ காப்பீடு 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை வழங்கப் படுகிறது. அதிகாரிகளுக்கு மருத்துவ காப்பீடு  6 லட்சம் முதல் 12 லட்சம் வரை வழங்கப்படுகிறது. அதிகாரிக ளுக்கு வழங்கக்கூடிய அதே மருத்துவ சலுகைகள்  தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். இந்த மருத்துவ சலுகைகள் இன்கோசர்வில் இருந்து நிரந்தரமானவர்களுக்கும் நிபந்தனை இன்றி வழங்க வேண்டும்.சொசைட்டி மூலம் நிரந்தரமான தொழிலாளர்கள் இப்பொழுது பணியில் உள்ள நிரந்தர தொழிலாளர்களில்  மூன்றில் இரண்டு பகுதியினர். நிரந்தரமாக்கப்பட்ட இவர்களில் பெரும்பகுதியினர் 10 ஆண்டுகள் 20 ஆண்டுகள் என ஒப்பந்த  தொழிலாளர்களாக கடுமை யான உடல் உழைப்பை செலுத்தி உள்ளனர்.  

இதில் ஒரு பகுதியினர் நிரந்தர மான சில ஆண்டுகளிலேயே 60  வயதை எட்டி ஓய்வு பெறும் நிலை யில் உள்ளனர்.உதாரணமாக இவர்க ளுக்கு நிர்வாகம் வழங்கிடும் ஓய்வூதியம், மருத்துவ உதவி தொகை  மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை  பெறுவதற்கு  பத்து ஆண்டுகள் அனுப வம் வேண்டும் என்று நிபந்தனை விதி த்தது வஞ்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. என்எல்சி வழங்கிடும் பென்ஷனும், மருத்துவ  அலவன்ஸும்  மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத் தில் எந்த நிபந்தனையும் இன்றி அமலாக்கிட வேண்டும். மேலும் இந்த தொழிலாளர்கள் ஓய்வு பெறுகின்ற போது கிராஜுவிட்டி வழங்குவதற்கான ஆண்டுகளை அவர்கள் ஏற்கெனவே பணியாற்றிய காண்ட்ராக்ட், சொசைட்டி பணி அனுபவத்தை கணக்கில் கொள்ள வேண்டும்.சொசைட்டி தொழிலாளர்கள் நிரந்தர மாக்கப்படுகிற போது அவர்கள்  சொசைட்டியில் பணியாற்றிய காலத் தையும் கணக்கில் கொண்டு ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டும். நடைபெறும் ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் வெற்றி பெறும் சங்கம் தான் புதிய ஊதிய மாற்று ஒப்பந் தத்தை ஏற்படுத்தும். 2017ல் சி ஐ டி யு முதன்மை சங்கமாக இருந்து உருவா க்கிய ஒப்பந்தத்தை போன்று சிறந்த ஒப்பந்தத்தை 2027லும் உருவாக்கிடு வோம். நெய்வேலியில் தொழிலா ளர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 7,000 உறுப்பினர்கள் கொண்ட கூட்டுறவு நாணய சங்கம் இயங்கி வருகிறது. கடந்த 15 ஆண்டு காலம் சிஐடியு பிரதிநிதிகள் இந்த நாணய சங்கத்தை நாணயமாக நடத்தி வருகிறார்கள்.  வருங்கால வைப்பு நிதியில் ஊழல் இன்றி கடன்கள் பெறுவதும், சிஐடியு வால் தான் என்பதை தொழிலாளர்கள் அறி வார்கள்.

 கடந்த ஆண்டுகளில் தொழிலா ளர்கள் ஊழியர்களுக்கு மறுக்கப்பட்ட சலுகைகளை, உரிமைகளை பெறுவதி லும், புதிய சலுகைகளையும், உரிமை களையும் பெறுவதிலும் நெய்வேலி சிஐடியு சங்கம் அயராது அர்ப்பணிப் போடு போராடும். நெய்வேலி நிறு வனத்தை பாதுகாக்க தொழிலா ளர்கள் ஊழியர்கள் நலன்களை பாது காக்க போர்வாளாகவும், கேடயமாக வும் செயல்படும் வரும் சி ஐ டி யு சங்கத் திற்கு வாக்களிக்க வேண்டுகிறோம்.