நாகர்கோவில், ஜூலை 7- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் குமரிமாவட்ட பயிற்சி முகாம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மார்த்தாண்டம் மதிலகத்தில் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட தலைவர் எம்.விஜயராகவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஹசன், நீலாம்பரன், நந்தகுமாரன், வாலிபர் சங்க முன்னாள் மாநில செயலா ளர் வேல்முருகன், வாலிபர் சங்க மாநில தலைவர் என். ரெஜீஷ்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாவட்ட செயலாளர் எட்வின் பிரைட் வேலை அறிக்கை சமர்ப்பித் தார். முகாமில் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப் பட்ட வாலிபர் சங்க நெல்லை மாவட்ட பொருளாளர் அசோக் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் வாலிபர் சங்க மாவட்ட, வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.