சேவாலயத்திற்கு ஆதரவாக பாஜக, இந்து முன்னணியினர் ரகளை
அவிநாசி, அக்.6– திருப்பூர் அருகே திருமுருகன் பூண்டி விவேகானந்த சேவாலயத் தில் தங்கியிருந்த ஆதரவற்ற சிறு வர்கள், கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக் கப்பட்டு மூன்று பேர் உயிரிழந்த சம் பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. மேலும், 11 சிறுவர்கள் மற் றும் காவலாளி ஒருவர் என 12 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வரு கின்றனர். திருப்பூர் அவிநாசி சாலை திரு முருகன்பூண்டியில் விவேகானந்த சேவாலயம் என்ற பெயரில் ஆத ரவற்ற குழந்தைகள் காப்பகம் உள் ளது. திருப்பூரைச் சேர்ந்த கே.செந் தில்நாதன் (70) என்பவர் இந்த காப் பகத்தை நடத்தி வருகிறார். இங்கு ஆதரவற்ற சிறுவர்கள் 15 பேர் தங்கி யிருந்தனர். இதில் ஒரு சிறுவன் விடுப்பில் ஊருக்குச் சென்று விட்ட நிலையில் மற்ற 14 பேர் இருந்தனர்.
புதன்கிழமை இரவு உணவு சாப் பிட்ட பிறகு, அவர்களுக்கு திடீ ரென வயிற்றுப் போக்கு, வாந்தி, மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டுள் ளது. விடுதியில் இருந்தோர் அவர் களுக்கு முதலுதவி சிகிச்சை அளித் ததாகவும், சிலரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று வந் ததாகவும் கூறப்படுகிறது. வியா ழக்கிழமை காலை சிறுவர்கள் நிலைமை மோசமாகி உள்ளது. இருவர் விடுதியிலேயே உயிரி ழந்து விட்டனர். மற்றவர்களை திருப் பூரில் உள்ள தனியார் மருத்துவ மனைகளுக்கு கொண்டு சென்ற னர். பின்னர் அங்கிருந்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் மேலும் ஒரு சிறுவன் இறந்தார். உயிரிழந்த சிறுவர்கள் எம்.மாதேஷ் (வயது 15), ஆர்.பாபு (வயது 13) மற்றும் கே.ஆதிஸ் (வயது 8) என்பது தெரியவந்தது. இதில் மாதேஷ் அங்கேரிபாளை யம் வி.கே. அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். பாபு, ஆதிஸ் இருவரும் அம்மாபாளையம் ஊராட்சி ஒன் றிய நடுநிலைப் பள்ளியில் 6 மற் றும் 4ஆம் வகுப்பு படித்து வந்தனர். இது தவிர டி.கௌதம் (17), ஏ.மணிகண்டன் (15), எம்.பிர காஷ் (11), கே.தர்ணீஷ் (11), வி. ரித்திஷ் (7), ஏ.வி.கவின்குமார் (13), ஆர்.ஹரீஷ் (8), ஜி.ஸ்ரீகாந்த் (12), ஆர்.குணா (8), கே.சதீஷ் (8), எஸ். சபரீ (9) ஆகிய 11 சிறுவர்களும், காப்பகக் காவலாளி ஜெயராம னும் (வயது 63) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் செந்தில்குமார் தலை மையிலான மருத்துவக் குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவக் கல் லூரி முதல்வர் டாக்டர் முருகேசன் மேற்பார்வை செய்தார். சம்பவம் பற்றி தகவல் அறிந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவர் களைப் பார்வையிட்டு, மருத்து வர்களிடம் சிகிச்சை விபரங்க ளைக் கேட்டறிந்தார். இதன் பின்னர் ஆட்சியர் வினீத் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறி யதாவது: விவேகானந்த சேவால யத்தைச் சேர்ந்த மூன்று சிறு வர்கள் இறந்த நிலையில், 11 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். நேற்று (புதன்கிழமை) இரவு ரசம் சாதம் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதை சாப்பிட்ட 14 சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு மயக்கம் உள் ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட் டுள்ளது. நேற்று இரவு சில குழந் தைகளை சிகிச்சைக்கு அழைத் துச் சென்றுள்ளனர் இந்த நிலை யில் இன்று (வியாழக்கிழமை) காலை 3 சிறுவர்கள் உயிரிழந்துள் ளனர். மேலும் 11 பேர் சிகிச்சைக் காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
முதல் கட்டமாக சிறுவர்கள் உண்ட உணவினை பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களின் சிறு நீர், மலம் ஆகியவற்றையும் பரி சோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த ஆய்வின்முடிவில் தான் என்ன மாதிரி கிருமி பாதிப்பு என் பது தெரியவரும். பிரேத பரி சோதனை அறிக்கையில், சிறுவர் கள் எதனால் இறந்தார்கள் என்பது தெரியவரும். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய விசா ரணை நடத்தி வருகின்றனர். விவே கானந்த சேவாலய நிர்வாகியிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என்றார். சிகிச்சை அளித்து வரும் மருத் துவர் செந்தில்குமார் செய்தி யாளர்களிடம் கூறுகையில், இங்கு கொண்டு வரப்பட்ட சிறுவர் களுக்கு நீர்ச்சத்து பற்றாக்குறை இருந்ததால், உடனடியாக அதற் குரிய மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வரு வோர் உடல்நிலை தொடர்ந்து கவ னிக்கப்பட்டு வருகிறது என்றார்.
திருமுருகன்பூண்டி கிராம நிர் வாக அலுவலர் தந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் அறக்கட்டளை நிர்வா கத்தின் மீது 174 (3) பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட குழந்தைகள் நல அலு வலர் ரஞ்சித பிரியா, வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன் மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் அபிநவ் குமார் ஆகி யோர் இப்பிரச்சனையில் விசா ரணை நடத்தி மாவட்ட ஆட்சியரி டம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரி வித்துள்ளது.
பொறுப்பாளர்கள் யாருமில்லை
விவேகானந்த சேவாலயாவின் காப்பாளர் கோபி என்ப வர் ஊருக்குச் சென்றுவிட்டார். ஒரு பெண் உள்ளிட்ட சமை யலர் இருவர் மற்றும் காவலாளி ஜெயராம் ஆகியோர் மட்டுமே அங்கு தங்கியிருந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு காப்பகத்தில் சிறுவர்களுக்கு புளி யோதரை, சுண்டல், இனிப்பு (லட்டு) வழங்கப்பட்டுள்ளது. புதன் கிழமை காலை இட்லி, பொங்கல் வழங்கப்பட்டது. மதியம் ரசம் சாதம், உருளைக்கிழங்கு பொரியல் வழங்கியுள்ளனர். அப்போதே உணவு ஒரு மாதிரி இருந்தது என தெரிவித்ததாக, சிகிச்சை பெற்று வரும் சிறுவர்கள் கூறினர். எனினும் மீண்டும் இரவும் அதே உணவை வழங்கியதாகத் தெரிவித்தனர். உணவு ஒவ்வாமை இருப்பதாக சிறுவர்கள் கூறிய நிலையிலும் அவர்களை கவனிக்க காப்பக நிர்வாகி, காப்பாளர் யாரும் இல்லை. சிலருக்கு சற்று கடுமையான பாதிப்பு ஏற்பட்ட பிறகும் உடனடி யாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாமல் இருந்தது தெரி கிறது. இருவர் உயிரிழந்த பிறகே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து மற்றவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள் ளனர். எனவே இது குறித்து காவல் துறை, மாவட்ட நிர்வாகம் முழு மையான விசாரணை நடத்தி உண்மையை கண்டறிந்து சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.