tamilnadu

கேந்திரிய வித்யாலயா ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல்

இடஒதுக்கீடு குறித்து ஒரு வரி கூட இல்லை -ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம்

மதுரை,அக்.16- கேந்திரிய வித்யாலயா ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் நடந்துள்ள தாகவும் இடஒதுக்கீடு குறித்து ஒரு வரி கூட இல்லை என்றும் இதனை சரி செய்திடக்கோரி ஒன்றிய கல்வி அமைச் சருக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை  நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்  கடிதம் அனுப்பியுள் ளார்.  இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி.வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஏதாவது ஒரு மீறல் கவனத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. இம்முறை கேந்திரிய வித்யாலயா.  ஒரு பணி நியமன அறிவிக்கை சென்னை ஐ.ஐ.டி & சி.எல்.ஆர். ஐ கேந்திரிய வித்யாலயாவால் 13-10-2021 அன்று  வெளியிடப்பட்டுள்ளது. அதில் பயிற்சி பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், யோகா ஆசிரியர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஒப்பந்த ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படவுள்ளது; அதற்கான “வாக் இன் இன்டர்வியூ” 20-10-2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கடிதம் ஒன்றை 14-10-2021 அன்று அனுப்பி இருந்தேன்.  அதில் நான் எழுப்பியுள்ள கேள்வி கள். இது நிரந்தர காலியிடங்களை நிரப்ப “கொல்லைப் புற வழியா?” மொத்த பணியிடங்கள் எவ்வளவு? காலியாக இருப்பவை எவ்வளவு? அவற்றை நிரப்ப நிரந்தர பணி நிய மனங்களுக்கு என்ன முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது? ஏன் ஓராண்டு முன்பாகவே அடுத்த ஆண்டுக்கான தேவையை கணக்கில் கொண்டு பணி நியமனங்களை நடத்தக் கூடாது?  இந்த அறிவிப்பில் ஓ. பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு குறித்து எது வுமே ஏன் ஒரு வரி கூட சொல்லப்பட வில்லை? தற்காலிக நியமனங்களில் கூட இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண் டும் என்றெல்லாம் உள்ள அரசின் உத்தர வுகள் அமலாக  வேண்டாமா? இட ஒதுக்கீடு பற்றிய தகவல்கள் ஒவ்வொரு பணி நியமன அறிவிக்கையில் வெளிப் படையாக தரப்பட வேண்டாமா?   இது போன்ற மீறல்கள் அனு மதிக்கப்படக் கூடாது. உடனே ஒன்றிய அமைச்சர் தலையிட வேண்டும் என்று கோரி இருந்தேன்.  ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களின் பரி சீலனைக்கு எனது கடிதம் முன் வைக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் அலுவலகம் பதில் அனுப்பியுள்ளது.  உரிய நட வடிக்கையை எதிர்பார்ப்போம்.  இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.
 

 

;