tamilnadu

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் முதலில் தேவை நீதி; இரண்டாவது தான் நிதி

கோஹிமா, டிச.13- நாகாலாந்தின் மோன் மாவட்டத் தில் உள்ள ஓடிங் கிராமத்தில், ராணு வத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 14 பேரின் குடும்பத்தினரும், சம்ப வத்துக்குக் காரணமானவர்கள் நீதி யின் முன் நிறுத்தப்படும்வரை அரசு வழங்கும் எந்த நஷ்ட ஈட்டையும் ஏற்கப்போவதில்லை என்று தெரி வித்துள்ளனர். இது குறித்து ஓடிங் கிராம நிர்வா கம் வெளியிட்டிருக்கும் அறிக்கை யில், டிசம்பர் 5-ஆம் தேதி துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் இறுதிச் சடங்குகளை செய்யும் பணியில் குடும் பத்தினர் ஈடுபட்டுக்கொண்டி ருக்கும்போது, மாநில அமைச்சர், பலியானோர் குடும்பத்துக்கு ரூ.18.30 லட்சத்தை வழங்கினார்.

அது அவர் தனிப்பட்ட அன்பின் காரணமாக கொடுக்கப்பட்டது என்று நினைத்தோம். பிறகுதான், அது அரசு அறிவித்த நஷ்ட ஈட்டின் முதல்கட்ட தவணை என்பது தெரிய வந்தது. சம்பவத்துக்குக் காரணமான இந்திய ராணுவப்படையின் 21வது துணை கமாண்டோவைச் சேர்ந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்; ஒட்டு மொத்த கிழக்குப் பகுதியிலிருந்தும், ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். அதுவரை அரசின் எந்த நிதியுதவியும் ஏற்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.